நாளை மருத்துவ முகாம்
விருதுநகர்:தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் காளிதாஸ் செய்திக்குறிப்பு: நாளை (ஆக. 9) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் குல்லுார்சந்தை உயர்நிலைப் பள்ளியில் ஆக. 9 காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. பல்துறை மருத்துவ சேவைகள் வழங்கப்படும். பரிசோதனைகள் அனைத்தும் கட்டணமின்றி செய்யப்படும். முதல்வர் காப்பீட்டு திட்ட அட்டை, மாற்றத்திறனாளி மருத்துவ சான்றுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே விருதுநகரை சேர்ந்த மக்கள் குறிப்பாக பதிவு பெற்ற, பெறாத தொழிலாளர்கள், நல வாரிய ஓய்வூதியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். முகாமிற்கு வருவோர் ஆதார் அட்டை எடுத்து வர வேண்டும், என்றார்.