அமைச்சர் தங்கம் தென்னரசு சொத்து குவிப்பு வழக்கு; பிப்.7க்கு ஒத்திவைப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்:அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையை பிப்.,7க்கு ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது.2006-- 2011 தி.மு.க., ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போதைய அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் 2012ல் வழக்கு பதிவு செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்குகளில் இருந்து 2022 டிசம்பரில் தங்கம் தென்னரசு, 2023 ஜூலையில் சாத்துார் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்து அமைச்சர்களின் விடுதலை செல்லாது எனவும், மீண்டும் இந்த வழக்குகளை ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முதலில் இருந்து விசாரிக்கவும் உத்தரவிட்டார்.இதனை எதிர்த்து அமைச்சர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டது. 2024 செப்.,6ல்வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.இருப்பினும் நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற தடை நிலுவையில் இருப்பதால் நீதிபதி ஜெயக்குமார் விசாரணையை பிப்.,7க்கு ஒத்தி வைத்தார்.