உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முக்காடு போட்டு ஒப்பாரி போராட்டம்

முக்காடு போட்டு ஒப்பாரி போராட்டம்

விருதுநகர் : 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி சென்னை உயர்நீதிமன்ற ஆணையை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் கருப்புத்துணி முக்காடு போட்டு ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் குமார்பாண்டி தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா பேசினர். மாநில செயற்குழு உறுப்பிபனர் முருகன் நன்றிக்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ