உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 22 மாதமாக பி.எப்., தொகை வழங்காத போக்குவரத்து கழகம் வழக்கு தொடர ஓய்வூதியர்கள் முடிவு

22 மாதமாக பி.எப்., தொகை வழங்காத போக்குவரத்து கழகம் வழக்கு தொடர ஓய்வூதியர்கள் முடிவு

விருதுநகர்:தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 22 மாதங்களாக பி.எப்., தொகை வழங்கப்படவில்லை. அதிகாரிகள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 2 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, எடுக்கப்படாத விடுப்புச் சம்பளம், ஒப்படைப்புத் தொகை ஆகியவை வழங்கப்படவில்லை. இவ்வாறு ஒரு தொழிலாளிக்கு குறைந்த பட்சம் ரூ. 20 லட்சம் நிலுவை உள்ளது. மேலும் தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த பி.எப்., தொகை கடந்த 22 மாதங்களாக வழங்கவில்லை. இதை கண்டித்து அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச் செயலாளர் கர்ஷன் கூறியதாவது: 2022 நவ., முதல் 2024 செப்., வரை 2 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் தரவுகள் திரட்டும் பணி நடந்து வருகிறது.அதன் பின்பு அந்தந்த மாவட்ட அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மீது போலீசாரிடம் புகார் அளிக்கப்படவுள்ளது. மேலும் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என சென்னையில் உள்ள பென்ஷன் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அக். 23ல் நடத்தப்படவுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ