உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ

சாத்துார் : விருதுநகர் மாவட்டம் சாத்துார் நடுச்சூரங்குடியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி , 23.இவர் உறவினரின் மகளான 16 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 2024 ஆக. 3 ல் அச்சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். சிறுமி கர்ப்பமானார். விருதுநகர்அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மகளிர் நல அலுவலர் மாரியம்மாள் விசாரித்தார். சாத்துார் மகளிர் போலீசார் முத்துப்பாண்டி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ