சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மாலை 4:30 மணிக்கு மேல் கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். இதனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.