உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செங்கோட்டை ரயில் மறு வழியிலும் தேவை

செங்கோட்டை ரயில் மறு வழியிலும் தேவை

ராஜபாளையம்: தாம்பரம்- - செங்கோட்டை இடையே முழுவதும் முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை 4:15 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்ட சிறப்பு ரயில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு 15 பெட்டிகளுடன் செங்கோட்டை வந்தடைந்தது. இந்த ரயில் பெட்டிகள் தற்போது தென்காசி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விடுமுறை முடிந்து ஊர் திரும்ப வசதியாக மறுமார்க்கத்திலும் இந்த முன்பதிவில்லாத சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை