மேலும் செய்திகள்
சிவகாசியில் ஆக்கிரமிப்பு கடைகள், கோயில் அகற்றம்
30-May-2025
சிவகாசி : சிவகாசி அண்ணாதுரை காய்கறி மார்க்கெட் அருகே ரோட்டில் இருபுறத்திலும் இருந்த ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டது.சிவகாசி போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் அண்ணாதுரை காய்கறி மார்க்கெட் உள்ளது. அனைத்து பொருட்களும் இங்கு கிடைப்பதால் அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் எப்பொழுமே போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்நிலையில் இந்த ரோட்டில் இருபுறமும் அதிக அளவில் ஆக்கிரமிப்பு இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கமிஷனர் சரவணன், மாநகர திட்டமிடுநர் மதியழகன், ஆய்வாளர் சுந்தரவள்ளி, மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் ரோட்டில் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள், கடைகள் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.கமிஷனர் கூறுகையில், நகரில் எங்கு ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் பாரபட்சம் இன்றி அகற்றப்படும். ஆக்கிரமிப்புகள் அகற்றிய இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் போலீசார் மூலம் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
30-May-2025