மேலும் செய்திகள்
பூக்கள், இலை விலை கிடுகிடு..
27-Aug-2025
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி, முகூர்த்தங்கள் இருப்பதால் அருப்புக்கோட்டையில் பூக்கள் விலை எகிறியுள்ளது. ஒருகிலோ மல்லிகை பூ ரூ.200 க்கு விற்ற நிலையில், 2 நாட்களாக, 1 கிலோ மல்லிகை பூ ரூ.ஆயிரத்து 500 க்கும், முல்லை, கனகாம்பரம் ரூ.ஆயிரம், பிச்சி ரூ. 800, செல்வந்தி ரூ.400, சம்பங்கி, ரோஜா ரூ.350 என்ற விலையில் உள்ளது. 2 நாட்கள் திருமண முகூர்த்தம், இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. பூக்கள் விலை உயர்ந்தாலும் மக்கள் பூக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
27-Aug-2025