உள்ளூர் செய்திகள்

நகை, பணம் திருட்டு

சாத்துார்; ஆலங்குளம் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜ், 67. ஆலங்குளம் சிமென்ட் பாக்டரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது காக்கி வாடன் பட்டியில் பட்டாசு ஆலையில் இரவு வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார்.ஜூன் 14 இவர் இரவு வாட்ச்மேன் பணிக்கு சென்று விட்டார் . இவர் மனைவி இந்திரா வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து தெருவில் உள்ள கடையில் சாவியை கொடுத்துவிட்டு பந்தல்குடி மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.ஜூன் 15 காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 9 பவுன் தங்க நகையும் ரொக்கம் ரூ 1 லட்சமும் திருடு போனது தெரிந்தது. ஆலங்குளம் போலீசார் சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி