உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு திரி தயாரிப்பு இருவர் கைது

பட்டாசு திரி தயாரிப்பு இருவர் கைது

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே ருத்திரப்ப நாயக்கன்பட்டியில் பிரவீன் என்பவரது வீட்டில் அரசு அனுமதி இன்றி, பட்டாசு திரியை சட்ட விரோதமாக தயார் செய்ததை நத்தம்பட்டி எஸ்.ஐ. முருகானந்தம் தலைமையில் போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து அவ்வூரைச் சேர்ந்த பிரவின் 28, தங்கேஸ்வரன் 25 ஆகிய இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 13 கிலோ கரி மருந்தையும், 14 கட்டு திரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை