பிளஸ் 1 தேர்வில் விருதுநகர் மாநில அளவில் 3ம் இடம் 96.23 சதவீதம் தேர்ச்சி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 96.23 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3வது இடம் பிடித்துள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வில் 223 பள்ளிகளைச் சேர்ந்த 9 ஆயிரத்து 968 மாணவர்களும், 11 ஆயிரத்து 787 மாணவிகளும் என 21 ஆயிரத்து 755 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 9388 மாணவர்களும், 11 ஆயிரத்து 546 மாணவிகளும் என 20 ஆயிரத்து 934 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 96.23 சதவீதம் பெற்று தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் 3வது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது. மேலும் அரசுப் பள்ளிகள் 15, உதவி பெறும் பள்ளிகள் 20, தனியார் பள்ளிகள் 37 என 72 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.தமிழ் 6, ஆங்கிலம் 2, இயற்பியல் பாடத்தில் 6, வேதியியல் 1, கணிதம் 10, கணினி அறிவியல் 100, வரலாறு 6, பொருளியல் 16, வணிகவியல் 40, கணக்குப் பதிவியல் 5, வணிக கணிதம் 2, கணினி பயன்பாடுகள் 27, செவிலியல் 87, தட்டச்சு பாடத்தில் 41 மாணவர்களும் சென்டம் பெற்றுள்ளனர்.