சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.நேற்று காலை 6:30 மணிக்கு தாணிப்பாறை வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மாலை 4:30 மணிக்கு மேல் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு கோயில் பூசாரிகள் பிரதோஷ வழிபாடு பூஜைகளை செய்தனர்.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.