அடிதடி வழக்கு:துணை மேயர் மன்னன் சரண்
மதுரை: மதுரை மாநகராட்சி 52-வது வார்டு இடைத்தேர்தலில் தகராறு செய்தது மற்றும் அரசு வக்கீல் தமிழ்செல்வன் வீட்டில் கல்எறிந்து தகராறு செய்தது உள்ளிட்ட இரு வழக்குகளில் முன்ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்டில் துணை மேயர் மன்னன் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மாஜிஸ்திரேட் கோர்டில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து மன்னன் மாஜிஸ்திரேட் கோர்டில் இன்று சரணடைந்தார்.