உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எழும்பூர் ரயில் நிலையத்தில் 2 ஆயிரம் கிலோ அரிசி பறிமுதல்

எழும்பூர் ரயில் நிலையத்தில் 2 ஆயிரம் கிலோ அரிசி பறிமுதல்

சென்னை : எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் செல்லவிருந்த, 2,000 கிலோ ரேஷன் அரிசியை, ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். சென்னை, எழும்பூரில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா செல்லும் சர்க்கார் எக்ஸ்பிரஸ், ஐதராபாத் செல்லும் காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில்களில், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் தனிப்படையினர் சோதனை செய்தனர்.

முன்பதிவு செய்யப்படாத பெட்டியில், பயணிகள் இருக்கைக்கு கீழே, ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. மொத்தம், 2,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதன் உரிமையாளர்கள் யார் என்று கேட்டும், யாரும் உரிமை கோரவில்லை. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையினர், ரேஷன் அரிசியை மீட்டு, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sudha
செப் 29, 2025 18:23

இந்த விடியோவை ஆளும்கட்சி டிவி சேனல் அனைத்திலும் ஒளி பரப்பட்டும். ஆளும்கட்சி ஐயோ என்று போக கடைசி சான்ஸ்


மேலும் செய்திகள்