உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில்: ரூ.9,445 கோடியிலான திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில்: ரூ.9,445 கோடியிலான திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு

சென்னை:சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை, 9,445 கோடி ரூபாயில் செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம், 13 ரயில் நிலையங்கள் அமைகின்றன.சென்னையில் தற்போது 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கத்தில் புறநகர் பஸ் நிலையம் துவக்கப்பட்டதால், அதுவரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1v1gyz8n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை, 15.5 கி.மீ., வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கப்படும் என, 2018ல் அரசு அறிவித்தது. இந்த தடத்தில், நெடுஞ்சாலையின் மேம்பாலமும் அமைய இருந்ததால், பாலம் வடிவமைப்பு மற்றும் நிலம் ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட்டது.இந்நிலையில், மாநில நெடுஞ்சாலை மற்றும் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுடன், தமிழக அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சில் இறுதி முடிவு செய்யப்பட்டு, சிறு திருத்தங்களுடன், விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் விரிவான புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.இந்த அறிக்கையை தலைமை செயலகத்தில், தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறையின் செயலர் கோபாலிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக், நேற்று சமர்ப்பித்தார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ் டன் எலியாசர் ஆகியோர் உடனிருந்தனர்.

13 நிலையங்கள்

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே 15.5 கி.மீ., துாரம் அமையும் இந்த மெட்ரோ திட்டத்தில், விமான நிலையம், பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி நகர், திரு.வி.க., நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கங்கரணை, பெருங்களத்துார், வண்டலுார், அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, கிளாம்பாக்கம் பஸ் நிலையம் என, 13 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன.மெட்ரோ ரயில் பாதை, மேம்பால பாதை, மெட்ரோ ரயில் பணிமனை பணிகளை மேற்கொள்ள, 9,445 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.மேலும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு தடையின்றி செல்ல, வெளிவட்ட சாலைவுடன் இணைக்க, தாம்பரம் அருகே சாய்வு பாதைகள் அமைகிறது. இந்த மேம்பாலச் சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் வந்து, செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும்.இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:சென்னையின் முக்கிய இணைப்பான, விமான நிலையம் -- கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இடையே, மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தில், சில மாற்றங்களுடன் விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளோம். ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து, 14 - 15 மீட்டர் உயரத்தில் நெடுஞ்சாலைக்கான மேம்பால சாலையும், 18 - 20 மீட்டர் உயரத்தில், மெட்ரோ ரயில் மேம்பால பாதையும் அமைகிறது.தற்போது, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள பாலங்கள் மற்றும் நடைமேம்பாலங்களில், தேவைக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்ய உள்ளோம். தேவைப்பட்டால், ஒரு பகுதியை இடித்துவிட்டு, பின்னர் மீண்டும் கட்டித்தரப்படும்.இந்த விரிவான திட்ட அறிக்கைக்கு அரசின் அனுமதி பெற்று, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒப்புதல் கிடைத்தவுடன், 'டெண்டர்' வெளியிட்டு நிறுவனம் தேர்வு செய்யப்படும்.பணியாணை வழங்கிய அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்த திட்டப்பணிகள் முடியும். பயணியரின் வருகைக்கேற்ப, நான்கு அல்லது ஆறு பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் இயக்கப்படும்.வெளிவட்ட சாலை வழியாக தாம்பரம் அருகில் உள்ள மேம்பால சாலையையும் இணைத்து, கிளாம்பாக்கம் வரை மேம்பாலம் அமைப்போம்.தொடர்ச்சியாக, கிளாம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை மேம்பால சாலை அமைக்கிறது. இதனால், விமான நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரை மேம்பால சாலை வசதி கிடைக்கும். போக்குவரத்து நெரிசல் குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மதிப்பீடு உயர்ந்தது ஏன்?

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம், 2018ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. திட்டத்திற்கான விரிவான அறிக்கை, 2023ல் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது, இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான மதிப்பீடு, 4,080 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கான பணியை துவக்குவதில் ஏற்பட்ட தாமதம், வடிவமைப்பில் மாற்றங்கள் காரணமாக தற்போது இந்த திட்டத்தின் மதிப்பீடு, 9,445 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இனியும் தாமதம் செய்தால், திட்டத்திற்கான செலவும் மேலும் அதிகரிக்கும் என்பதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, பயணியர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Varadarajan Nagarajan
பிப் 15, 2025 12:59

பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றாக கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அமைத்து பல ஆண்டுகள் பிறகு மெட்ரோ ரயில் வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் கிளம்பாக்கம் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் என அறிவித்துவிட்டு ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்குக்கூட தேவையான கட்டமைப்புகள் இல்லாமல் அவர்கள் நீதிமன்றம்வரைசென்று இடைக்கால தீர்வுகாண வேண்டியதாயிற்று. அவசரகதியில் திறப்புவிழா செய்து மூன்று ஆண்டுகள் ஆனபிறகுதான் மெட்ரோ ரயில் இணைக்க திட்டம் தயாரித்துள்ளார்கள். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தயாரித்தபிறகு அதற்கு மத்திய அரசின் ஒப்புதல்பெற தேவையான மாற்று திட்டங்களுடன் அறிக்கையை முழுமையாக தயாரிக்காமல் மத்திய அரசை குறைகூறிக்கொண்டிருந்தார்கள். அதுபோல் இல்லாமல் ஒப்புதல் பெற்று, ஒப்பந்தம் கூறி, பணிகள் துவங்கி முழுமையாக முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவரும்போது இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தை செங்கல்பட்டுக்கு மாற்றவேண்டியிருக்கும். பிறகு என்ன மீண்டும் ஆய்வு, திட்ட அறிக்கை போன்றவற்றை தொடங்கவேண்டியத்துதான். ஆகமொத்தத்தில் மக்கள் நலனுக்காகவோ சௌகர்யங்களுக்காகவோ திட்டங்கள் இல்லை


பாமரன்
பிப் 15, 2025 09:36

மத்திய மாநில அரசுகள் வேலை செய்யும் லட்சனத்தின் அடையாளம் இது... முதலில் கிளாம் பாக்கம் பேருந்து நிலையம் அதிமுக கொண்டு வந்த திட்டம். அப்போதே மத்திய அரசுக்கு ரயில் நிலையம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் மெட்ரோ பற்றிய தேவைகள் பற்றி தெரிவித்த நியூஸ் இருந்தது. வழக்கம் போல யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை... இந்த மெட்ரோ திட்டம் கூட 2018ல் ப்ளான் பண்ணி இன்னும் ரோஜனையில் மட்டுமே இருக்கு... இதே வேகத்தில் போனால் திட்டம் வரும் அதாவது 2047 விக்கி பாரத்தோ என்னவோ ஜி அன் கோ சொல்வாங்களே அப்ப தான்... கரெக்டா அந்த நேரத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இடம் மாறும் அல்லது தேவையே இல்லாமல் போயிருக்கும்... அப்புறம் என்ன சென்னை மெட்ரோவில் தற்போது பயனம் செய்யும்போது CMBT அப்பிடின்னு ஒரு டேஷன் வரும் போது புதிய பயணி இது என்னன்னு கேட்டா ...அதுவா ஒரு காலத்தில் ஒலகத்தில் பெரிய பஷ்ஷுஇஷ்டாண்டு இருந்துச்சாம்னு இப்ப சொல்றதை கிளாம்பாக்கத்துக்கும் சொல்வோம்.... இப்போதைக்கு சம்பந்தமில்லாமல் டீம்கா ஒயிக ஸ்வாஹா அப்பிடின்னு சொல்லி முடிப்போம்...


Kasimani Baskaran
பிப் 15, 2025 07:14

அவசர அவசரமாக கடைக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பேருந்து நிலயத்தையே வெளிமாநிலத்துக்கு கொண்டு சென்றது போல கொண்டு போனார்கள். இன்றுதான் மெட்ரோ வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது. அணைத்து திராவிட மத அரசுகளும் செய்யாத கெடுதல்களைக்கூட இவர்கள் செய்கிறார்கள்.


சமீபத்திய செய்தி