உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திண்டுக்கல் தேனியில் 3 நாள் கனமழை

திண்டுக்கல் தேனியில் 3 நாள் கனமழை

சென்னை:தமிழகத்தில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும்.சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு வேளைகளில் இடி, மின்னல் காற்றுடன் திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சம் 36 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ