உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சம்மன் ஒட்ட சீமான் வீட்டில் தனி போர்டு

சம்மன் ஒட்ட சீமான் வீட்டில் தனி போர்டு

சென்னை: சம்மனை கிழித்த விவகாரத்தில் போலீசார் ஈகோவில் தான் இப்படி நடந்து கொண்டதாக சீமானின் மனைவி கயல்விழி குற்றம்சாட்டியுள்ளார். நீலாங்கரையில் சீமான் வீட்டு முன்பு ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தது தொடர்பாக சீமான் வீட்டு காவலாளிக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, போலீசாரின் சம்மனை ஒட்டுவதற்கு வசதியாக, வீட்டு முன்பு தனி போர்டு சீமான் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=31rt9ztz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து சீமான் மனைவி கயல்விழி செய்தியாளர்களிடம் பேசியதாவது: போலீசார் ஈகோவில் தான் இப்படி செய்கிறார்கள். சம்மன் கொண்டு வரும் செய்தி எனக்கு வந்தது. சம்மனை கையெழுத்து போட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்தேன். சீமான் கிருஷ்ணகிரியில் இருப்பது தெரியும். அவருக்கு கூட கொடுத்திருக்கலாம். வீட்டுக்கு வந்தவர்கள் ஏதும் சொல்லாமல், சம்மனை ஒட்டி சென்று விட்டார்கள். நான் தான் படிப்பதற்காக அதனை கிழிக்கச் சொன்னேன். கிழிக்கச் சொன்னது நான்தான்.அந்த சம்மனை படித்துக் கொண்டிருந்த போது, ஆய்வாளர் பிரவீனின் சத்தம் கேட்டது. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களை விட கூட இருப்பவர்கள் மீது கை வைத்தால் தான் எங்களுக்கு கோபம் வரும் என்று அனைவருக்கும் தெரியும். எங்களை மனதளவில் தொந்தரவு செய்ய வேண்டும் என்பது அவர்கள் நோக்கம்.ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரரை குப்பை போல தூக்கி வீசுகிறார்கள். அவருக்கு துப்பாக்கி வைக்க உரிமம் உள்ளது. ஆய்வாளர் பிரவீனின் சட்டை கசங்கி இருந்ததால், மன்னிப்பு கேட்டேன். முன்பே திட்டமிட்டு தான் போலீசார் இங்கு வந்துள்ளனர். நாங்கள் அனைத்திற்கும் துணிந்து தான் இருக்கிறோம். ஆய்வாளர் பிரவீன் வேண்டுமென்றே செய்துள்ளார்கள். வீட்டில் இருப்பவர்களை கைது செய்து மனதளவில் தொந்தரவு கொடுக்கிறார்கள். நேர்மையான ஒரு தலைவர் சீமான். எங்களுக்கு பயம் எல்லாம் கிடையாது. சம்மனை கிழித்த எனது தம்பியை கைது செய்தே ஆவேன் என்றார். இல்லையெனில் படையை இறக்குவேன் என்று கூறினார். எங்கள் வீட்டின் மீது கல் எறிந்த போது போலீசார் என்ன செய்தனர். காவல்துறை மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது. வக்கீல்களும், கட்சியினரும் வருகிறார்கள் என்று எனக்கு தெரியும். இரு தரப்பினரிடையே பிரச்னையை உண்டாக்கி, நம்ம பிள்ளைங்க மீது கை வைக்கப் போகிறார்கள்என்று தோன்றியது. கைது செய்தவர்களை ரிமான்ட் செய்து விட்டதால், வழக்கு கோர்ட்டுக்கு சென்று விட்டது. கோர்ட் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. விரைவில் வெளியே எடுப்போம். ஆய்வாளர் பிரவீன் மீது மனித உரிமைகள் ஆணையம் மீது முறையிடுவோம். எங்களுடைய ஆட்கள் அங்கு இருந்தது மற்றும் போலீசாரின் ஈகோவின் காரணமாகத் தான் நேற்று நான் ஏதும் பேசவில்லை. இன்று பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நடிகையை வைத்து சீமானை முடக்க முயற்சிக்கிறார்கள், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

அப்பாவி
மார் 01, 2025 11:05

ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி இருக்கலாம். இன்னும் சினிமா போஸ்டர் மாதிரி போலீஸ் போய் சம்மன் ஒட்டுமாம். கேவலமா இருக்கு.


surya krishna
பிப் 28, 2025 20:40

rendu pondatti ya nee????? vetkama illa unnakku


sankaranarayanan
பிப் 28, 2025 18:37

நீதி மனற்ற வழக்கிலேயே உள்ளது எந்த அம்மனையும் அந்தந்த வீட்டுக்காரரிடம் கொடுக்கலாம் அவர் இல்லையென்றால் அவ்ரத்க்கு உறவினரிடம் கொடுக்கலாம் அப்படி யாருமே அந்த வீட்டில் இல்லயென்றால் ரெஜிஸ்டெரெட் தபாலில் அனுப்பலாம் அதுவும் இல்லையென்றால் கடாய்சியாகத்தான் அந்த வீட்டின் கதவில் ஓட்டலாம் ஆனால் எக்காரணத்தைக்கொண்டும் அதை வாங்க அங்கே ஆட்கள் இருக்கும்போது சுவற்றிலோ அல்லது கெட்டிலோ ஓட்டக்கூடாது இதை முழுவதும் அறியாத போலீசு அவசரத்தில் சம்மனை கேட்டில் ஒட்டியுள்ளனர் இது முற்றிலும் தவறு அதுவும் நீதிமன்ற சம்மனாக இருந்தாலும் பரவாயில்லை போலீசு சம்மனை வீட்டில் முன் கேட்டில் ஓட்டுவது முழுவதும் தவறு தவறு தவறு இதை நீதி மன்றமே முன்வந்து போலீசை எச்சரிக்கை வேண்டும் அந்த சமமான அவர்கள் அந்த வீட்டிலுள்ள அவரத்தகு மனைவியாரிடமோ அல்லது காலாளியிடமோ கையில் கொடுத்திருக்கலாம் அதற்கு ஓப்பந்தமும் பெற்றுருக்கலாம் எல்லாமே அவசரத்தில் ஆகியும் அரசின் உணவாயு இப்படித்தான் இருக்கும்


Girishankar Jayaraman
பிப் 28, 2025 17:05

we need to appreciate that police officer. சூரப்புலி . He used his power and force on a watchman : . That is is the brain and power for these officers. What else to say. In front of camera itself a police officer says he will kill and also beating a military guy. If its a common man to what extent these police forces can go. Court should control police excesses. How come in public can a police officer beat a man. Who gave power to these guys. Even if the guy is a watchman, he has dignity and self respect. Police guys think they are lords. They can do these excesses only at the level of watchman. Can any of these police officers have guts to go and use excesses on a sitting corrupt politician Leave minister, I am referring to a kuppai thotti Municipality councilor level person. Karma to see these type of police officers also.


Kasimani Baskaran
பிப் 28, 2025 15:49

நேரிடியாக காவலாளியை சென்று அடிப்பதெல்லாம் ரொம்பவே ஓவர். அடிக்கும் அல்லது வன்முறையை உபயோகிக்கும் உரிமை காவல்துறைக்கு கிடையாது. கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் பொழுது மஜிஸ்திரேட்டிடம் தாக்கப்பட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும். பாதுகாப்பு இல்லை என்றால் அதை தெளிவாக சொல்ல வேண்டும். பாதுகாப்பற்ற ஆபத்தான முறையில் துப்பாக்கியை கையாண்டு கிட்டத்தட்ட உடைத்தே விட்டார்கள் ஸ்ப்ரிங் வெளியே தெரிகிறது


rama adhavan
பிப் 28, 2025 14:53

சும்மா கப்சா. சம்மனை போட்டோ எடுத்து தனக்கு அனுப்ப இந்த அம்மா சொல்லி இருக்கலாமே? அல்லது இந்த அம்மாவே வீட்டு வாசலுக்கு வந்து படிக்கலாமே? சுக்கு சுக்காக கிழித்தால் எப்படி படிப்பது? அவ்வளவும் அகந்தை. இப்போ பேசுவது பொய்.


SUBRAMANIAN P
பிப் 28, 2025 13:55

இனி எத்தனை சம்மன் வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்ளலாம். வசதி செய்துகொடுத்திருக்கிறார்கள்.


Balamurugan
பிப் 28, 2025 13:38

கொஞ்சமா பேசுனா உன்னோட புருஷன். தமிழ்நாட்டில் மற்ற மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் உங்க கட்சிக்கு தேவை இல்லை தானே. உனக்கு எவனும் சப்போர்டுக்கு வர மாட்டான்.


San S
பிப் 28, 2025 13:10

பார்த்து பேசவும்.


முருகன்
பிப் 28, 2025 12:41

சட்டம் சாதாரண மக்களுக்கு மட்டும் இல்லை இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை