மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
59 minutes ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
3 hour(s) ago | 29
காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவிலில் முன்னாள் தமிழக காங்., தலைவர் இளையபெருமாள் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற முன்னாள் காங்., மாநில தலைவர் அழகிரி அளித்த பேட்டி:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் விவாதத்திற்குரியது. காங்.,கை பொறுத்தவரை மதுவிலக்கு என்பதில் உறுதியாக உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., கட்சிகள், கள்ளக்குறிச்சி மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கிறீர்களா அல்லது அந்த மரணத்தை வைத்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் செய்கிறீர்களா.இந்த கட்சிகள் தங்களின் மது கொள்கையை வெளிப்படுத்த மறுக்கின்றன. இந்த கட்சிக்காரர்கள் எல்லாம் அந்த ஊரில் மது விற்பனை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.ஸ்டாலினை வீழ்த்த மதுவை கையில் எடுத்திருக்கிறார்கள். முதல்வர் ராஜினாமாதான் அவர்களின் நோக்கம். பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மக்கள் மீது இல்லை. இந்த அரசு நீடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.மதுவற்ற தமிழகம் தான் வளர்ச்சி நிறைந்த, வலிமைமிக்க தமிழகமாக இருக்கும். தவறு செய்தவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். குற்றவாளிகளை பாதுகாக்கவில்லை. குற்றத்தை நியாயப்படுத்தவில்லை . சரியான பாதையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இந்த அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும் என்கின்ற கருத்தை காங்., கட்சி வன்மையாக கண்டிக்கிறது.இவ்வாறு அழகிரி கூறினார்.
59 minutes ago | 2
3 hour(s) ago | 29