உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக பாலகிருஷ்ணன் நியமனம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக பாலகிருஷ்ணன் நியமனம்

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலகிருஷ்ணனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை வென்ற இவர், தமிழில் குடிமைப்பணி தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 15 நூல்களின் ஆசிரியராவார். 1984ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், ஒடிசா அரசிலும், இந்திய தேர்தல் ஆணையத்திலும் 34 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
பிப் 26, 2025 22:01

திரு பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். திரு பாலகிருஷ்ணன் அவர்கள் முதலில் தமிழக முதல்வருக்கு சரியாக தமிழ் பேச கற்றுக்கொடுக்க ஒரு சிறந்த தமிழ் ஆசிரியரை நியமிக்கவேண்டும்.


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 26, 2025 23:09

நீங்க முடிவே பண்ணிட்டீங்களா? இந்த பாலகிருஷ்ணன் இல்லே எந்த கொம்பனாலேயும் அப்பாவுக்கு தமிழ் சொல்லித்தரமுடியாதுன்னு ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை