உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்விக்கான தடைகள் புதிய வடிவில் எழ துவங்கியுள்ளது : ஸ்டாலின்

கல்விக்கான தடைகள் புதிய வடிவில் எழ துவங்கியுள்ளது : ஸ்டாலின்

சென்னை : கல்விக்கான தடைகள் மீண்டும் புதிய வடிவில் எழ துவங்கி உள்ளன என லயோலா கல்லூரில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:கல்விதான் யாராலும் அழிக்க முடியாத செல்வம் . ஒருகாலத்தில் அது அனைவருக்கும் கிடைக்காத நிலை இருந்தது. கல்வி தான் ஒருவரின் தடைகளை தகர்த்து, தலை நிமிரச் செய்யும் என்பதால் கல்விக்கு அதிக முக்கியத்துவம். எல்லோரும் படிக்கலாம் என வாசலை திறந்து விட்ட கல்லூரிகளில் லயோலா கல்லூரியும் ஒன்று. அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்.என்பதே மாநில அரசின் நோக்கம். உயர்கல்வி மற்றும்ஆராய்சி கல்வியின் பொற்காலமாக திகழ்கிறது. இந்தியாவின் தலைசிறந்த கல்விநிறுவனங்கள் எல்லாம் தமிழகத்தில் உள்ளன.

புதிய வடிவில் கல்விக்கு தடைகள்

கல்விக்கான தடைகள் புதிய வடிவில் மீண்டும் துவங்கி உள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை குறைக்கும்வகையிலான புதிய பேச்சுக்கள் மீண்டும் புதிய வடிவில் எழ துவங்கி உள்ளன. இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

V RAMASWAMY
ஆக 02, 2024 08:28

என்னமோ இந்த தி.மா அரசுதான் கல்லூரிகளைத் திறந்தாற் போலல்லவா பேசுகிறார். பல கல்லூரிகள் நீங்கள் பிறப்பதற்குமுன் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அறியவும். அதேபோல் தமிழகம் தொழில் வளர்ச்சியில் முதன்மையிடம் என்பது காலஞ்சென்ற பாரத ஜனாதிபதியும் அந்நாள் தமிழக தொழிற்துறை அமைச்சருமான திரு ஆர் வெங்கட்ராமன் அவர்களின் முயற்சியால் வளர்ந்தது என்பதையம் அறியவும்.


PARTHASARATHI J S
ஆக 02, 2024 06:31

ஸ்டாலினை கருத்து சொல்பவர்கள் கழுவி கழுவி ஊத்திறாங்க. என்றாலும் தொடர்ந்து தேர்தலில் வெற்றி. மக்களும் சரியில்ல. சிஸ்டமும் சரியில்ல.


Senthil K
ஆக 02, 2024 00:15

தயவுசெய்து.. தமிழக முதலமைச்சரே... உடனே ராஜினாமா செய்து விட்டு... இந்த.. திருட்டு அரசை கலைத்து விடுங்கள்... புண்ணியமாக போகும்... உங்களுக்கு மாணவர்களை.. உருவாக்கும் அளவுக்கு திறமை கிடையாது...


S. Narayanan
ஆக 01, 2024 23:16

அரசு கல்லூரிகளில் நல்ல கட்டிடம் நல்ல ஆசிரியர் என்று எந்த வசதியையும் இல்லாமல் இவர் மீண்டும் மத்திய அரசை குறை சொல்ல ஆரம்பித்து விட்டார்


தாமரை மலர்கிறது
ஆக 01, 2024 22:49

படிக்க சொன்னால் தடை என்று புலம்புகிறார். மூணும் மூணும் ஆறு என்று பத்தாம் வகுப்பில் எழுதி பாஸ் செய்து சாதி கோட்டாவில் அரசு வேலை வேண்டும் என்பது தான் திராவிட புத்தி.


சோலை பார்த்தி
ஆக 01, 2024 22:36

1/4. ன்ன நமக்கு தெரியும் .1/8. கொஞ்சம் கொஞ்மாவது தெரியும் ...1/16....1/32......1/64.....1/128 இத. .வாய்பாடாக சொன்னார்கள். . கால் ..அரைக்கால் .. மானி... வீசம். . இன்னும் பல கற்ற இந்தியனை. .அரை.. கால் . அப்படிய்னா. . என்னானே தெரியாதபடி செஞ்சது யாரு..


வாய்மையே வெல்லும்
ஆக 01, 2024 22:04

நீட்டி முழக்கி வழவழ கொழ கொழ பேச்சு வேணாம் .. நீட் பிரச்சனையால் உங்களுக்கு ரொம்ப அடிவிழுது போல.. உங்களோட பகற்கனவு பலிக்கவில்லை.. நேரடியாக சொல்லமுடியாத நிலை ஹ் ஹா ஹ


Shunmugham Selavali
ஆக 01, 2024 21:55

பொத்தாம் பொதுவாக பேசாமல்,என்ன தடை என்று அண்ணாமலை போல தெளிவாக புள்ளிவிவரங்களுடன் விளக்கவும் முதல்வரே. மத்திய அரசின் நவோதயா பள்ளிகளுக்கு தடைபோட்டது யார் / ஏன் என்று விளக்கினால் முதலைக்கண்ணீர் வடிப்பது அம்பலமாகும்.


krishna
ஆக 01, 2024 21:39

ENGE ENGE MURASOLI ARIVU JEEVI OOPIS MUTTU VENUGOPAL.


muttu kopal
ஆக 02, 2024 08:16

இன்னும் 200 ரூவா கிரெடிட் ஆகலை அதான்


r ravichandran
ஆக 01, 2024 21:30

கல்விக்கான சிறப்பான கல்வி நிலையங்கள் தனியார் கல்வி நிறுவனங்கள் தான். அரசு கல்வி நிறுவனங்கள் தங்கள் பெருமையை இழந்து 57 ஆண்டுகள் ஆகின்றது.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ