உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூபாய் குறியீடு சர்வதேச போட்டிக்கானது: பா.ஜ., சீனிவாசன் விளக்கம்

ரூபாய் குறியீடு சர்வதேச போட்டிக்கானது: பா.ஜ., சீனிவாசன் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : ''ரூபாய் குறியீடு சர்வதேச அளவில் போட்டியிடுவதற்குத்தானே தவிர, தமிழகத்தோடு போட்டியிட அல்ல' என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா'' என பா.ஜ.,மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

ரூபாய் குறியீடு என்பது சர்வதேச அளவில் இருக்கும் பல கரன்சி குறியீடுகளுக்கு இணையாக இந்தியாவுக்கும் ஒரு குறியீடு இருக்க வேண்டும் என்பதற்குரியது. இது அமெரிக்க டாலரின் குறியீட்டுக்கு போட்டியிடுவதற்குதானே தவிர, தமிழகத்தோடு போட்டியிடுவதற்கு அல்ல. 2010ல் தி.மு.க., மத்திய ஆட்சியில் இருந்தபோதுதான் ரூபாய்க்கான இக்குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா. அப்போதெல்லாம் நீங்கள் துாங்கிக் கொண்டு இருந்தீர்களா.ரூபாய் என்ற வார்த்தையின் மூலச்சொல் தமிழ் அல்ல. அது சமஸ்கிருத வார்த்தை. இப்போது அதைத்தானே பயன்படுத்த முன்வந்திருக்கிறீர்கள். நம்தேசிய கீதம் 'ஜன கண மன' வங்க மொழியில் பாடப்படுகிறது. அது தமிழ் இல்லை என்பதால் உங்கள் தி.மு.க., அரசு, தேசிய கீதத்தை புறக்கணிக்க முடியுமா. நான் இதற்கு உங்களிடம் பதிலை எதிர்பார்க்க மாட்டேன். ஏனென்றால் நாங்கள் எழுப்பும் எந்தக் கேள்விக்கும் உங்களிடம் பதில் இல்லை என்பது எங்களுக்கு தெரியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

अप्पावी
மார் 15, 2025 16:36

£,€,$,¢ போன்ற கரன்சி சிம்பல்களைப் பாத்து நமக்கு வெச்சுக்கிட்ட சூடுதான் ₹. இதுக்கு முன்னால் Rs, Re ந்னு வெச்சுக்கிட்டிருந்த போது பொருளாதார வளர்ச்சி நல்லாத்தான் இருந்திச்சு.


Madras Madra
மார் 15, 2025 12:53

புரிந்து கொள்வோருக்கு சொல்லலாம் இவிங்களுக்கு தான் இப்ப எல்லாமே குழப்பமாக தெரியுதே முதல்லயே துர்ப்பிணி இப்ப கர்ப்பிணி சொல்லவே வேண்டாம்


karthik
மார் 15, 2025 11:59

அட அறிவு களஞ்சியமே - இன்னும் எவ்ளோ நாள் இப்படி முட்டாளால்களா இருப்பீங்க.


Anand
மார் 15, 2025 11:40

ஏற்கனவே நான் சொன்னது தான், ஒன்று ஆள்பவனுக்கு குறைந்தபட்ச அறிவாவது இருக்கவேண்டும் அல்லது அறிவு உள்ளவனையாவது கூட வைத்துக்கொள்ளவேண்டும்.. இவை இரண்டும் திரவிடியவிடம் இல்லை இருக்கவும் முடியாது..... எனவே இந்த ஆட்சி முடியும் வரை இன்னும் இதுபோல நிறைய கோமாளித்தனங்களை காணலாம்....


sankar
மார் 15, 2025 11:25

திமுக அரசு மற்றும் கட்சிக்கு பிரிவினைவாத போக்கு ஆகிவிட்டது - ஆட்சி கலைக்கப்படவேண்டும் - கட்சி முடக்கப்படவேண்டும்


saravan
மார் 15, 2025 10:54

இதுதாண்டா திராவிட மாடல்... இதுதாண்டா திராவிட மாடல்... விளங்கிடும்...


PR Makudeswaran
மார் 15, 2025 10:38

தலைமைக்கும் புத்தியில்லை அதை தாங்கி புடிப்பவனுக்கும் மூளையில்லை. இவர்களை நம்பினால் நமக்கும் அது இல்லாமல் போய் விடும். ஜாக்கிரதை.


நாஞ்சில் நாடோடி
மார் 15, 2025 10:36

முதல்வர் பெயரில் இருக்கும் ஸ் சம்ஸ்கிருத எழுத்துதான். அதை நீக்க முடியுமா?


अप्पावी
மார் 15, 2025 13:07

அறிவுக்கொழுந்து. ஸ,ஷ, க்ஷ, ஹ எழுத்துக்கள் சமஸ்கிருதம் அல்ல. அவை கிரந்த எழுத்துக்கள். சமஸ்கிருத எழுத்துக்களுக்கு மேலே கோடு இருக்கும். आ, का, सा இப்பிடி வரும். கிரந்த எழுத்தையும், மொழியையும் சமஸ்கிருதத்தைக் கொண்டாந்து அப்பவே ஒழிச்சுக்கட்டிட்டாங்க. இப்போ இந்தியைக் கொண்டாந்து தமிழ், தெலுங்கு எல்லாத்தையும் காலி பண்ணிருவாங்க.


Bala
மார் 16, 2025 07:29

அட அப்பாவி ஸ் சமஸ்க்ரித எழுத்துதான், சமஸ்க்ரித உச்சரிப்புதான். விஸ்வம் என்பது சமஸ்க்ரித வார்த்தை. உலகம் என்பது அர்த்தம். அந்த சமஸ்க்ரித வார்த்தையை நாம் தமிழில் அவ்வாறு எழுதுகிறோம். அதே போல்தான் ஸ்டாலினில் வரும் ஸ் அதை நம்மாளு தமிழ்ல ஸ் ன்னு தன்னுடைய வசதிக்கு எழுதி வச்சுக்கிட்டாரு. பெயர் ரஷ்ய பெயர். அதுவும் தமிழ் பெயர் இல்லை. எழுத்தும் தமிழ் இல்லை பெயரும் தமிழ் இல்லை. ரூ வும் தமிழ் இல்லை. திராவிடமும் தமிழ் இல்லை எந்த நிதியும் தமிழில்லை. உதயா வும் தமிழ் இல்லை சூரியனும் தமிழில்லை. ஒட்டுமொத்தத்தில் திமுக கட்சியே தமிழருக்கான கட்சி இல்லை


Sampath Kumar
மார் 15, 2025 08:48

அதை தான் நாங்களும் சொல்லுகிறோம் சாரே ஆங்கிலச் படி ஏன் என்றால் அது சர்வதேச மொழி அதை படித்தால் எம் குழைந்தகள் சர்வதேச போட்டியில் வெல்லவர்கள் உங்க ஹிந்தி சர்வதேச மொழி கிடையாது ஹிந்தி படித்தால் நஹீஹை புரியுதா ஜி இரு மொழி கொள்கை தான் சாலா சிறந்தது எண்கள் முதல்வர் தெளிவாக தான் இருக்காரு நீங்க தான் குழம்பி கிடக்கிகின்றார்கள்


Sridhar
மார் 15, 2025 12:55

அப்போ எக்கேடுகெட்டு போங்கள் னு தமிழக மக்களை விட்டுவிடலாமா? ஏன்னா போவுற போக்க பாத்தா ஒன்னும் திருந்தறமாதிரி தெரியல்ல.


Mettai* Tamil
மார் 15, 2025 13:12

அப்புறம் எதற்கு உங்க தெளிவாக இருக்கும் முதல்வர் மகள் மற்றும் உங்க கட்சிக்காரங்க நடத்தும் மெட்ரிக் ,CBSE பள்ளிகளில் பணத்தை வாங்கிகொண்டு மூன்றாவது மொழி சொல்லிக்கொடுக்கணும் ? சில அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதல் மொழியாக உருது ,அரபி ஏன் சொல்லிக்கொடுக்கணும் ?. எல்லாத்தையும் தூக்கிடவேண்டியது தானே ?...கல்லா கட்ட முடியாது அதானே ?? தமிழ் நாட்டில் மும்மொழி கொள்கை நடந்துகிட்டு தான் இருக்கு ...


ramani
மார் 15, 2025 08:34

தலையில் வெற்றிடம் என்ன செய்வது தமிழக மக்களின் தலையெழுத்து பிரிவினை தூண்ட முயற்சி செய்கிறது ஊராட்சி ஒன்றிய அரசு. அப்படியென்றால் தனி கொங்கு நாடு வேண்டும் என்று குரல் ஒலிக்க ஆரம்பித்து விடும். இது புரியாத அரசாக இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை