உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., போராட்டம் வாபஸ்

பா.ஜ., போராட்டம் வாபஸ்

''அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற தவறினால் வரும், 20ம் தேதி முதல் தமிழக பா.ஜ., சார்பில் தொடர் போராட்டம் நடக்கும் என்று அறிவித்திருந்தோம். தற்போது வரும், 17ம் தேதி திட்டத்தை துவக்கி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எங்களுடைய முக்கிய கோரிக்கை நிறைவேறி இருப்பதால் போராட்டம் கைவிடப்படுகிறது. விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும், தமிழக அணைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை பா.ஜ., தொடர்ந்து குரல் கொடுக்கும். தமிழக அரசு அதன் மீதும் அக்கறை செலுத்தி விவாசிகளுக்கு ஆதரவாக இருக்கும் என நம்புகிறோம். - - அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி