பட்ஜெட்:/தென் மாவட்டம் 1 லட்சம் புத்தகங்களுடன் நெல்லையில் நுாலகம்
பொதுமக்கள் பயன் பெறும் வகையிலும், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன் பெறும் வகையிலும், தலா ஒரு லட்சம் புத்கங்கள் மற்றும் மாநாட்டு கூடம் உள்ளிட்ட வசதிகளுடன், திருநெல்வேலியில் நுாலகம் அமைக்கப்படும். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், புதிதாக கலை, அறிவியல் கல்லுாரி திறக்கப்படும். மதுரை மாவட்டம் மேலுாரில், காலணி தொழிற்பூங்கா அமைக்கப்படும் துாத்துக்குடி மாவட்டத்தில், செயற்கை இழை மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலையில், 1,000 மெகா வாட் திறனில், நீரேற்று மின் திட்டம், பொது - தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்படும். மதுரை திருமங்கலம் - ஒத்தக்கடை இடையே, 11,368 கோடி ரூபாயில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை, மத்திய அரசின் மூலதன பங்களிப்பு பெற அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும், பணிகள் துவக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலா பயணியரை கவரும் வகையில், 'ரோப்வே' எனும் உயர் போக்குவரத்து அமைப்பினை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ஆராயப்படும்.