உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026 சட்டசபை தேர்தலில் டிபாசிட் வாங்க முடியுமா? அண்ணாமலைக்கு சவால்!

2026 சட்டசபை தேர்தலில் டிபாசிட் வாங்க முடியுமா? அண்ணாமலைக்கு சவால்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : வரும் சட்டசபை தேர்தலில், அண்ணாமலை போட்டியிட்டு 'டிபாசிட்' வாங்குவதற்கான பணியை இப்போதே துவங்கட்டும்,'' என அமைச்சர் சேகர்பாபு பேசினார்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னை ஓட்டேரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, குழந்தைகள் காப்பகம் மற்றும் 10 கருணை இல்லங்களில் நேற்று நடந்தது. தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்று, உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் சேகர்பாபு பேசியதாவது: லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்று காட்டிவிட்டோம். அடுத்து நம் இலக்கு 2026 சட்டசபை தேர்தல் தான். இன்று முதல், அதற்கான பணிகளை துவங்க வேண்டும். தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கொள்கையின் அடிப்படையிலேயே, துாத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழிக்கு ஓட்டுகள் கிடைத்ததே தவிர, கருணாநிதியின் மகள் என்பதற்காக இல்லை. இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.நான் உட்பட மற்ற அமைச்சர், மேயர் என அனைவரும், தலைவரின் உடன்பிறப்புகள் போல் குடும்பமாக செயல்படுகிறோம். தமிழகத்தில் 12 இடங்களில் பா.ஜ., இரண்டாவது இடம் பிடித்துள்ளது பற்றி, அ.தி.மு.க., தான் யோசிக்க வேண்டும்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப பேசக்கூடியவர். நான் சவால் விட்டு சொல்கிறேன். கோவையில், அண்ணாமலை என்ற தனிமனித பேனரில் போட்டியிட்டு இருந்தால், அவர் டிபாசிட் கூட வாங்கி இருக்க மாட்டார். ஒரு கட்சியின் நிழலில் தான், அவர் போட்டியிட்டார். லோக்சபா தேர்தலைப்போல், அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அந்த தேர்தலிலும் அண்ணாமலை தனித்து போட்டியிடட்டும். டிபாசிட் தொகையை தக்கவைக்க இப்போதே அவர் பணியை துவங்கட்டும். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 113 )

Ramesh Sargam
ஜூன் 10, 2024 20:11

அண்ணாமலை டெபாசிட் வாங்குவது இருக்கட்டும். திமுக, கூட்டணி இல்லாமல் தனியாக நின்று தேர்தலில் டெபாசிட் வாங்குமா?


திண்டுக்கல் சரவணன்
ஜூன் 10, 2024 13:29

திமுக தொடங்கிய நாள் முதல் இதுவரை தனித்து போட்டி இட்டது இல்லை. 2026 தேர்தலில் திமுக தனித்து நிற்குமா? தனித்து நிற்க, அதிமுகவுக்கு துணிவு உள்ளது. பாஜகவுக்கு உள்ளது. திமுகவுக்கு துணிவு இருக்கா


sethu
ஜூன் 10, 2024 13:19

திமுக பதவியில் வைத்துக்கொண்டு தேர்தல் நடத்தக்கூடாது திருட்டு கும்பல் இது அதனால கள்ள ஒட்டு போட முடியாத அளவில் ஓட்டுப்பதிவுக்கு இந்தியா அளவில் மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து இப்போதே அனைவரின் கண்விழியை ஸ்கேன் செய்து மட்டுமே ஒட்டு போடும் சிஸ்டெம் அறிமுகம் செய்யணும் ஓட்டளித்தவரின் மொபைலுக்கு ஒடிபி வரும் படியாக நவீனமயமாக்கணும் ஓட்டுப்போடும் நபர் எங்கிருந்தாலும் அவர் ஓட்டுப்போடும் வசதியை இன்டர்நெட்டமூலம் வாங்கணும் வேட்பாளர்கள் டிவி பாசிபோக்கில் ஒட்டு சேகரித்தால் போதும் நேரடியாக எந்த மீட்டிங்கும் வேண்டாம் தெருத்தெருவாக ஒட்டு சேகரிப்பும் வேண்டாம் அது குற்றம் என அறிவிக்கணும் . 15 நாட்களுக்கு முன்பே மொபில் நம்பர் பதிவேற்றம் செய்யவேண்டும் ஒரு மொபைலுக்கு அதிகபட்சம் 5 நபர்களுக்கு உறவினர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கலாம் அதற்க்கு மேல் கள்ள ஓட்டுக்கு கட்டாயமாக போட வழிவகுக்கும் இந்தியா நாட்டில் 200 கோடிமொபைல் போன் புழக்கத்தில் உள்ளது. இதில் ஒரு வசதி வெளி வூருக்கு போனாலும் வெளி நாட்டிற்கு போனாலும் ஒட்டு போடலாம் ,பிலிப்பைன்ஸ் நாட்டு வெளிநாட்டில் வசிக்கும் மக்கள் இப்படித்தான் வாக்களிக்கின்றனர் இப்படி கொண்டுவந்தால் திமுக காங்கிரசு மம்தா கேஜரிவால், பினராய் போன்றவர்கள் நேர்மையாக ஜெயிப்பார்கள் என நம்பிக்கை இருக்கிறதா?


vijay
ஜூன் 10, 2024 12:38

அமைச்சர் அவர்களே அவர் கோயம்பத்தூரில் போட்டியிட்டு டெபாசிட்டும் இரண்டாவது இடமும் பிடித்துள்ளார் ...நான் உங்களிடம் கேட்கிறேன், பணம், பிரியாணி, குவாட்டர், கொலுசு, கொடுக்காமல் உங்களால் ஜெயிக்க முடியுமா? மக்கள் உங்களை எல்லாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். விலை வாசி எல்லாம் தாறு மாறக ஏறிவிட்டது. மின்சாரம், பஸ் கட்டணம், பால் விலை, பத்திர பதிவு என்று விலை ஏற்றதா துறைகளே இல்லை. ஊடகங்கள் துணையோடு, பலவீனமான எதிர் கட்சிகள் உள்ளது கொண்டு உங்கள் ஊழல் ஆட்சியை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற இறுமாப்பில் தான் இது போன்ற சவால்கள் விடுக்கிறீகள். மக்கள் உங்களை தூக்கி எறிய அதிக காலங்கள் வேண்டி வராது மக்கள் பணியை செயுங்கள் அதை விடுத்து வெற்று சவுடால்கள் கட்சிக்கும் இந்த அரசுக்கும் நல்லது இல்லை.


tmranganathan
ஜூன் 10, 2024 07:48

பணம் கொடுக்காமல் தனித்து நின்று பார் தீமுகாவே. அண்ணாமலை போல படித்து நேர்மையாந மனிதனா? நெஞ்சை தொட்டு சொல்லட்டும்.


இராம தாசன்
ஜூன் 10, 2024 02:47

தி மு க என்றாவது தனித்து போட்டி இட்டு இருக்கிறதா? முதலில் தனித்து போட்டி இட்டு உன்னால டெபாசிட் வாங்க முடியுமா - 60 வருஷமா கட்சி நடத்துறீங்க ஒரு தேர்தலில் கூட தனித்து இட வாக்கு இல்லை - நீ எல்லாம் பேச வந்துட்ட


GANESUN
ஜூன் 09, 2024 08:17

அம்மா இருந்த வரைக்கும் வாலாட்டி கொண்டு இருந்திட்டு அப்பறம், பொறைக்கு ஆசபட்டு அறிவாலயம் வாசல்ல நுழைஞ்சிட்டு... பேசற பேச்சு பாத்தியா..


Ramki
ஜூன் 10, 2024 12:39

சரியாகச் சொன்னீர்கள்


Ashok Subramaniam
ஜூன் 09, 2024 03:44

என்னவோ தனியா நின்று ஜெயிட்டமாதிரி மார்த்தட்டுவானேன்? ஒட்டுத்துணிக் கூட்டணியில கொஞ்சம் பெரியதுணி.. வாக்காளர் பட்டியலில் மோசடி, இருட்டிலே பணப் பரிமாற்றம், இன்னும் என்னவெல்லாமோ தகிடுதத்தம் செஞ்சி 40 வாங்கிட்டு என்ன பெருமை? வாக்கு சதவிகிதங்களைப் பார்த்தாலே தெரியவேண்டாம்.. அதிமுக, திமுக வாக்கு வங்கியிலே அண்ணாமலையோட முயற்சியிலே பெரிய சதவிகித வீழ்ச்சி இருப்பதைப் பார்த்துப் புரிந்துகொள்ளும் அறிவாவது அறிவாலய அடிமைகளுக்கு இருக்குமா.. சந்தேகம்தான்...


naadodi
ஜூன் 08, 2024 19:25

நாவடக்கம் வேண்டும். குதிக்காதீர்கள். அண்ணாமலையும் பா.ஜ .கவும் வாங்கிய ஓட்டுக்கள் காசு கொடுக்காமல் வந்தவை. ஜால்ரா அடிக்காமல் கொஞ்சம் யோசிங்கய்யா


Vaduvooraan
ஜூன் 08, 2024 17:56

ஏன் சார்...மக்கள் எல்லோரும் பிரகாஷ் ராஜா என்ன... நீங்கள் சொல்லிக்கொடுத்தபடி எல்லாம் நடக்க??


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ