உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரிவாள், கத்திகள் தயாரிப்பு பட்டறைகளில் சிசிடிவி கட்டாயம் : ஐ.ஜி.,க்கள் உத்தரவு

அரிவாள், கத்திகள் தயாரிப்பு பட்டறைகளில் சிசிடிவி கட்டாயம் : ஐ.ஜி.,க்கள் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'கத்தி, அரிவாள், சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறைகளில், 'சிசிடிவி' கட்டாயம் பொருத்த வேண்டும்' என, காவல் துறை மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மாநகர கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:

கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கிடைக்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக, காவல் நிலைய எல்லைகள் தோறும், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்போர், அவர்களின் மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க வேண்டும்எத்தனை இடங்களில், ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறைகள் உள்ளன என்ற தகவலை திரட்ட வேண்டும்விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்குதான், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குகின்றனர் என்பதை, உறுதிப்படுத்தும்படி, பட்டறை உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும். மற்ற காரணங்களுக்காக வருவோருக்கு ஆயுதங்கள் விற்கக் கூடாது. ஆயுதம் வாங்க வருவோர் குறித்து சந்தேகம் எழுந்தால், போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டும்ஆயுதங்கள் தயாரிக்கும் எல்லா பட்டறைகளிலும், 'சிசிடிவி' கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும். இதில் பதிவாகும் காட்சிகள், வாடிக்கையாளர்களின் முகம் தெரியும்படி இருக்க வேண்டும்ஆயுதங்கள் வாங்கிய நபர்களின், தொடர்பு எண்களை எழுதி, பதிவேடு பராமரிக்க வேண்டும். இந்த விபரங்களை, பட்டறை உரிமையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

முருகன்
மார் 14, 2025 21:15

குற்றவாளிகளை பிடித்து ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுத்தாலே பாதி குற்றங்கள் குறைத்து விடும்


N Annamalai
மார் 14, 2025 09:30

பட்டறையில் செய்யும் அரிவாளால்,கத்தி இவற்றை விற்பனை செய்யும் இடங்கள் அதிகம் .செய்யும் இடங்களை கவனித்தால் போதாது .இது தேவைற்ற காவல்துறை வியாபாரிகள் மோதலுக்கு வழிவகுக்கும் .அனைவருக்கும் வேலை கிடைக்க வலி செய்யவும் குற்றங்கள் நின்று விடும்


अप्पावी
மார் 14, 2025 09:15

அண்ணா பல்கலையில் சார் வந்த போது சிசிடிவி யையெல்லாம் அணைச்சு வெச்ச மாதிரி இங்கயும் பண்ணிருவோமே


Minimole P C
மார் 14, 2025 07:50

It shows the incapablity of Police and this order of police is next to impossible. I know very small manufactuers of knifes etc whose daily life to meet both the ends itself very difficult. Under this situation is order is passed. This order may be implemented and given to press just to make people believe that police is in action. If the nexus between the police and anti socials is curbed then 60 to 70% improvement will be there in crime reduction.


Iniyan
மார் 14, 2025 07:37

தலையை விட்டு வாலை பிடிக்கும் கதை இது. முட்டாள்கள்


Appa V
மார் 14, 2025 06:28

Tasmac மது தயாரித்து factory யிலிருந்து வெளியே வருவதை CCTV யில் கண்காணிக்க ஏற்பாடு செய்யலாம்


Minimole P C
மார் 14, 2025 07:42

well said.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை