30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை:'தமிழகத்தில் இன்று முதல் 30ம் தேதி வரை, லேசானது முதல் மிதமான மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன் இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிக்கை:மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.நாளை முதல் 30ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மதுரை மாவட்டம், சாத்தியார் பகுதியில், 3 செ.மீ., மழையும், திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 2 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.