உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில்பாலாஜி வழக்கு ஜூன் 19ல் நீதிமன்றம் தீர்ப்பு

செந்தில்பாலாஜி வழக்கு ஜூன் 19ல் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை:சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது, ஜூன் 19ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என, சென்னைமுதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இவ்வழக்கில், கடந்தாண்டு ஜூனில். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத் துறை கைது செய்தது. ஜாமின் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஜாமின் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து, தன்னை விடுவிக்கக் கோரிய மனுவும் நிலுவையில் உள்ளது. தற்போது, புழல் மத்திய சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது.இதையடுத்து, புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன், நேற்று பிற்பகல் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அவரின் நீதிமன்ற காவலை, 39வது முறையாக, ஜூன்19 வரை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார்.மேலும் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி எஸ்.அல்லி, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது, ஜூன் 19ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ