உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களின் கோபத்திற்கு தி.மு.க., ஆளாகும்!

மக்களின் கோபத்திற்கு தி.மு.க., ஆளாகும்!

அற்ப காரணங்களுக்காக மீண்டும், பா.ஜ.,வின் பிரசார வாகனத்தை நிறுத்தியதால், காவல் துறையின் வாயிலாக, தி.மு.க,, அரசின் அத்துமீறல்கள் எல்லை மீறியுள்ளன.இரவு 10:00 மணிக்கு பின் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்ற சாக்குப்போக்கின் கீழ், போலீசார் எங்கள் வாகனத்தை நிறுத்தினர்.நாங்கள் பிரசாரம் செய்யவில்லை என்று விளக்கப்பட்டது. எங்கள் வாகனத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. பிரசார வாகனம் முன் அனுமதிக்கப்பட்ட இடத்தில் கூடியிருந்த, 2,000 தொண்டர்களை மட்டுமே சந்திக்க விரும்பினோம். விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவது குறித்து போலீசாரிடம் விளக்கிய போதும், அவர்கள் எங்களை மாற்று வழியில் செல்லும்படி வலியுறுத்தினர். வரும் 19ல் கோவையில், மூன்று ஆண்டு கால தி.மு.க.,வின் தவறான ஆட்சியை ஏற்க மறுத்து, ஒருமனதாக ஓட்டளிக்கும் போது, கொடிய தி.மு.க., அரசு, மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். - அண்ணாமலை,தமிழக பா.ஜ., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ