| ADDED : ஜூன் 12, 2024 12:40 AM
“கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக மாணவர்களின் புத்தக கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், உணவு கட்டணம் போன்ற பல்வேறு கல்வி கட்டணங்களை செலுத்த, 1 லட்சம் ரூபாயாக வழங்கப்பட்டு வந்த கல்வி கடன், 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்வி பயிலும் காலம் முடிந்து, ஆறு மாதங்கள் கழித்து, வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.கல்வி கடனுக்கான அதிகபட்ச வட்டி, 10 சதவீதம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை வாயிலாக பட்டய படிப்பு, இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்ட படிப்பு, தொழில்முறை படிப்புகளுக்கும், கூட்டுறவு நிறுவனங்கள் கல்வி கடன் வழங்குகின்றன. முதல் ஆண்டு மாணவர்கள் மட்டுமின்றி, இரண்டாவது ஆண்டு, மூன்றாவது ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், கல்விக் கடன் வழங்கப்படுகிறது.- பெரியகருப்பன்,கூட்டுறவு அமைச்சர்