உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போனில் குறுஞ்செய்தி வரும் காத்திருந்தாலும் பணம் வராது

போனில் குறுஞ்செய்தி வரும் காத்திருந்தாலும் பணம் வராது

கோவை: பெரிய தொகை மோசடி நடந்தால் மட்டுமே, போலீசாரிடம் புகார் அளிக்கிறோம். 500 - 1,000 ரூபாய் வரையிலான பண மோசடிகளுக்கும், புகார் தெரிவிக்க போலீசை அணுக வேண்டும் என்பதற்கு, சமீபத்தில் நடந்து வரும், இந்த புதுவித மோசடி உதாரணம்.கடைகளில் பொருள் வாங்க வரும் மோசடி பேர்வழிகள், 'ஜிபே' வாயிலாக பணம் செலுத்தி விட்டதாக, ஸ்க்ரீன் ஷாட் காண்பிப்பர். ஆனால், பணம் வரவாகி இருக்காது. பணம் அனுப்பியது போல 'ஸ்கிரீன் ஷாட்' மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்ப ஆப்கள் வந்துவிட்டன.'சைபர் கிரைம்' இன்ஸ்பெக்டர் அருண் கூறுகையில், ''தற்போது போலி பேமென்ட் செயலிகள் பயன்படுத்தி நடக்கும், மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பணம் அனுப்பியது போல ஸ்கிரீன் ஷாட், மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி உள்ளிட்டவை அனுப்புகின்றனர்.''மொபைலில் குறுஞ்செய்தி வந்து விட்டது என நம்பக் கூடாது. ஒவ்வொரு முறையும், வங்கி கணக்கில் பணம் வந்து விட்டதா என, சோதனை செய்ய வேண்டும். பணம் வந்த பிறகே, உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !