உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்தி திணிப்பு அரசியலமைப்புக்கு எதிரானது: புதிய சட்டங்கள் குறித்து இ.பி.எஸ்., விமர்சனம்

ஹிந்தி திணிப்பு அரசியலமைப்புக்கு எதிரானது: புதிய சட்டங்கள் குறித்து இ.பி.எஸ்., விமர்சனம்

சென்னை: 'அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை ஹிந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான ஹிந்தி திணிப்பு' என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விமர்சனம் செய்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில், இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது. முக்கியமாக சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த ஹிந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல மற்றும் கண்டனத்திற்குரியது.

ஹிந்தி திணிப்பு

அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை ஹிந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான ஹிந்தி திணிப்பு. ஹிந்தி திணிப்பானது பல மொழிகள், பல கலாசாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நெறிப்படுத்தி, சமஸ்கிருதம் கலந்த ஹிந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்ய வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Durai Kuppusami
ஜூலை 02, 2024 11:33

நீ கட்சிய சுத்தமாக அழிச்சிட்டுதான் சேலம் போவ.... அதிமுக விசுவாசி


அரசு
ஜூலை 02, 2024 09:26

எடப்பாடி அவர்கள் இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறார், மூன்று கொடிய சட்டங்களை அல்ல.


ram
ஜூலை 02, 2024 04:22

ஹிந்தி திணிப்புன்னு சொல்லி பிற மொழி படிக்க விடாமல் மக்களை முட்டாளாக்கும் செயல் ஒரு கேடு கெட்ட செயல்.. ஏனோ இந்த திராவிட கட்சிகளுக்கு இந்த கீழ்த்தரமான எண்ணமோ..


அஜய் சென்னை இந்தியன்
ஜூலை 01, 2024 23:56

ஹிந்தி திணிப்பு என்றால், தமிழகத்தில் நடை பெற்று வரும் பிரிவினைவாதம், மதவாதம், இனவாதம், மொழி அரசியல், ஜாதிய அரசியல், உழல், லஞ்சம், கட்ட பஞ்சாயத்து, சாலைகள் போடுவது இல்லை, தண்ணீர் மற்றும் மின்சாரம் சரியாக வழங்குவது இல்லை, எல்லா அரசு சேவை கட்டணத்தை உயர்த்துவது, தனியார் கல்வி கட்டணம் மிக மிக அதிகம், தனியார் மருத்துவம் செலவு மிக மிக அதிகம், அரசு வேலை லட்சம் இல்லாமல்.கிடைக்காது, பாலியல் பிரச்சனைக்கு முடிவு இல்லை, ஊர் எல்லாவற்றிலும் திருட்டு நடக்கிறது, இது இன்னும் 1000 பிரச்சனைகளை சொல்ல முடியும். ஆனால் தமிழ்நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல் வாய் கிழிய பேசுவது.


Ganesh Shetty
ஜூலை 01, 2024 23:43

அப்போ அடிமை மொழியான ஆங்கிலத்தை இந்திய நடைமுறையில் வைக்கலாமா ? அது உனக்கு சமாதானமா ? பதில் சொல்லு எடப்பாடி


sankaranarayanan
ஜூலை 01, 2024 23:08

நானும் இருக்கிறேன் இருக்கிறன் என்று கூவும் இவரின் பேச்சு தடுமாறுகிறது யாருமே இவர் பேச்சை கேட்பாரில்லை செய்வதிலும் சொல்வதிலும் கருத்துக்களே இல்லை இவர் சிறிது காலம் இளைப்பாறினால் நல்லது


நிக்கோல்தாம்சன்
ஜூலை 01, 2024 22:56

சார் கள்ளசாராயத்தை திணிக்கும் திராவிட பிற்போக்கு கழகத்துக்கு எதிரான உங்களின் விமர்சினம் படிக்க ஆவலாய்


rengaraju seenivasan
ஜூலை 01, 2024 22:45

இந்தியை இந்தியாவின் மொழியாக வெளிநாடுகளிலும் அறிவிக்கும் முயற்சி வெகு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் மெதுவாக வலிக்காமல் நாம் அறியாமல் செய்து கொண்டிருந்த துரோகத்தை பி ஜே பி பட்டவர்த்தனமாக செய்து கொண்டிருக்கிறது. தென் மாநிலங்களிடையே ஒற்றுமை இல்லாமல் போனதால் வெள்ளைக்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை அருமையாக செய்து கொண்டிருக்கிறார்கள் இந்திக்காரர்கள் . இந்தியாவை இந்தி நாடாக்கும் முயற்சியை உயிரைக் கொடுத்தேனும் தடுத்தாக வேண்டும். சோத்துக்கு பிழைப்பு தேடி கூட்டம் கூட்டமாக ரயிலில் வந்து குவிந்து கொண்டிருக்கும் இந்திக்காரர்களின் எஜமானர்களும் அவர்களின் ஆடிவருடிகளும் சொல்லுகிறார்கள் இந்தி படித்தால்தான் நமக்கு எதிர்காலமாம். நாடு ஒற்றுமையாய் இருக்க வேண்டுமெனில் இந்தி சமஸ்க்ரித திணிப்பை கை விட வேண்டும்.எல்லா இந்திய மொழிகளும் சமமாக நடத்தப் பட வேண்டும். இந்திக்காரர்களும் ஏதேனும் ஒரு தென்னிந்திய மொழியைக் கற்றுக் கொண்டு ஒருமைப்பாட்டை வளர்க்க வேண்டும்.


Naresh Kumar
ஜூலை 01, 2024 21:51

மிகச் சரியாக எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் இங்கு பதிவிடும் அனைவரும் ஏதோ ஹிந்தியில் கொடுத்து இந்தியில் பிறந்து இந்திக்கு வக்காலத்து வாங்குவது போல் இருக்கிறது கண்மூடித்தனமான பிஜேபி ஆதரவு என்பது தவறான இசையில் கொண்டு போய் விடும் என்பது உறுதி.


venugopal s
ஜூலை 01, 2024 21:38

ஹிந்தித் திணிப்பு, மதத் தீவிரம் இரண்டையும் கை விடும் வரை பாஜக தமிழகத்தில் வெற்றி பெற முடியாது!


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி