மேட்டூரில் நீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் : கர்நாடகா அணைகளில் திறக்கப்படும் நீரின் அளவுக்கேற்ப, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். நேற்று முன்தினம் வினாடிக்கு, 11,736 கன அடியாக இருந்த அணை நீர்வரத்து, 10,706 கனஅடியாக நேற்று சரிந்தது.அதேநேரம், டெல்டாவில் சம்பா சாகுபடி பணி துவங்கியதால், 19,000 கன அடியாக இருந்த நீர் திறப்பு, நேற்று காலை, 8:00 மணி முதல், 23,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 114.91 அடியாக இருந்தது.