உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பந்தலுார் காப்பகத்தில் புதைந்துள்ள மர்மம் உரிமையாளர் உட்பட 10 பேரிடம் விசாரணை

பந்தலுார் காப்பகத்தில் புதைந்துள்ள மர்மம் உரிமையாளர் உட்பட 10 பேரிடம் விசாரணை

பந்தலுார்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே பெக்கி என்ற இடத்தில் அகஸ்டின் என்பவர், 1999 முதல், 'லவ்ேஷர்' எனும் பெயரில் 'சாரிட்டபிள் டிரஸ்ட்' நடத்தி வந்தார். இதற்கு எந்த அனுமதியும் பெறாத நிலையில், மனநல காப்பகமாக மாற்றி செயல்படுத்தி வந்தார்.அங்கு, 500க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், 200 பேர் உறவினர்களால் அழைத்து செல்லப்பட்டனர். மீதம் உள்ளவர்கள் தங்குவதற்கு போதிய வசதிகள் இல்லாத நிலையில், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இன்றி அனைவரும் அவதிப்பட்டனர். இதுகுறித்து, கலெக்டருக்கு புகார் சென்றது.தொடர்ந்து, கடந்த, 9-ம் தேதி அதிகாரிகள் ஆய்வு செய்து காப்பகத்திற்கு, 'சீல்' வைத்ததுடன், அங்கிருந்த, 13 மன நோயாளிகள் மற்றும் இரண்டு பணியாளர்களை கோவை மற்றும் ஊட்டி காப்பகங்களில் சேர்த்தனர்.இந்நிலையில், காப்பகத்தில் இதுவரை, 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் உடல்கள் காப்பகத்தை ஒட்டிய சதுப்பு நிலத்தில் யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்யப்பட்ட தகவல் விசாரணையில் தெரியவந்தது.தொடர்ந்து, காப்பக உரிமையாளர் அகஸ்டின், அவரது மனைவி கிரேசி, காப்பக பொறுப்பாளர் எலிசபெத் உட்பட, 10 பேரிடம் நெலாக்கோட்டை ஸ்டேஷன் போலீசார் நேற்று விசாரணையை துவக்கினர்.டி.எஸ்.பி., சரவணன் கூறுகையில், ''இந்த சம்பவம் தொடர்பாக, அகஸ்டின் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ''காப்பகத்தில் இறந்தவர்களை யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்துள்ளனர். இங்கு நடந்த பண பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னரே முழு விபரம் தெரியவரும்,'' என்றார்.

.2.43 கோடியில்

சினிமா தயாரிப்புபந்தலுார் அருகே அனுமதியில்லாமல் காப்பகம் நடத்தி வந்த அகஸ்டியன் சமீபத்தில் புதர் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படம், 2.43 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரி ய வந்துள்ளது. இவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

JeevaKiran
ஜூலை 18, 2024 11:08

சுமார் 25 ஆண்டுகளாக அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இத்தனை பெரிய கட்டிடம், 500 பேர், இதெல்லாம் 25 ஆண்டுகளாக எப்படி அரசு அதிகாரிகள் வேலை செய்கிறார்கள் என்று... வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை செய்தாலே போதும். இதில் ஏதேனும் அ.வியாதிகள் குறுக்கீடு செய்தால் அவர்களையும் கைது செய்யுங்கள். இப்போதான் ரவுடிகளை அடக்கு முழு சுதந்திரம் தரப்பட்டிருக்கிறதே?


Muthuraj
ஜூலை 17, 2024 16:32

உடல் உறுப்பு வியாபாரமாகி இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது, தீர விசாரிக்க வேண்டும், எந்த ஒரு பின்புலமும் விசாரணைக்கு தடையாக இருக்கக்கூடாது


sankaran
ஜூலை 12, 2024 18:14

உடல் உறுப்புக்கள் விற்பனை செய்ய பட்டிருக்கலாம்.. பாலவாக்கம் மாதிரி...


s sambath kumar
ஜூலை 12, 2024 12:08

ஒரு மண்ணும் நடக்காது. திருட்டுப் பயலுக, சிறுபான்மையினர் என்று பரிவு காட்டி கேஸை நீர்த்துப் போகச் செய்வார்கள். இறந்த மற்றும் கொடுமைப்படுத்தப்பட்டவர்களின் ஆன்மா இந்த ..களை ஏதாவது செய்தால் தான் உண்டு. தெய்வம் கூலி கொடுத்தால் தான் உண்டு. ஆனால், அது உடனே நடக்காது.


jayvee
ஜூலை 12, 2024 11:44

இந்த முன்னூறு நபர்களை காண்பித்து வெளிநாட்டிலிருந்து கிருத்துவ மிஸ்சிஓனரி மூலமாக பல ஆயிரம் கோடிகள் சம்பாதிருப்பார்களா?


மேலும் செய்திகள்



புதிய வீடியோ