மேலும் செய்திகள்
'நீரோடை'யில் சங்கமித்த இலக்கிய ஆர்வலர்கள்
23-Feb-2025
சென்னை: கடந்த ஆண்டு வெளியான கவிதை, புதுக்கவிதை, மனிதநேயம், வாழ்வியல், சிறுகதை, செவ்வியல் இலக்கிய கட்டுரை, பொதுக்கட்டுரை, குழந்தை இலக்கியம், குறுநாவல், நாவல், கல்வியியல், இளைஞர் நலன், ஆளுமை மேம்பாடு, ஆன்மிகம், மத நல்லிணக்கம் போன்ற கருத்துக்களில் வெளியான சிறந்த நுால்களுக்கு, தலா 10,000 ரூபாய் இலக்கிய பரிசு வழங்க, கவிதை உறவு முன்வந்துஉள்ளது. பரிசுக்கு நுாலின் மூன்று பிரதிகளை, 'ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், 420இ, மலர் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை - 600 040' என்ற முகவரிக்கு, மார்ச், 31க்குள் அனுப்பலாம்.
23-Feb-2025