| ADDED : மே 21, 2024 01:36 PM
சென்னை: கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (மே 21) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (மே 21) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த 4 மாவட்டங்களுக்கும் 'ஆரஞ்சு' அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8jhkwdb4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மே 23ம் தேதி
தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் மே 23ம் தேதி மிக கனமழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொட்டி தீர்த்த கோடை மழை!
தமிழகத்தில் கோடை மழை 9 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று காலை வரையிலான காலக்கட்டத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. மார்ச் 1 முதல் வழக்கமாக கோடை மழை 105.5 மி.மீ என பதிவாகும் நிலையில், தற்போது 114.7 மி.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது.