உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொருளாதார கணக்கெடுப்பு அரசு குழுக்கள் அமைப்பு

பொருளாதார கணக்கெடுப்பு அரசு குழுக்கள் அமைப்பு

சென்னை: மத்திய அரசு நடத்தும், 2025 - -26ம் ஆண்டு பொருளாதார கணக்கெடுப்புக்கான கட்டமைப்பை உருவாக்க, மாநில, மாவட்ட அளவிலான குழுக்களை தமிழக அரசு அமைத்து உள்ளது.இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை: மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 2025 - -26ம் ஆண்டுக்கான பொருளாதார கணக்கெடுப்பை நடத்த உள்ளது. தமிழகத்தில், இந்த பொருளாதார கணக்கெடுப்பை நடத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்க, மாநில, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படுகிறது.தமிழக அரசின் தலைமை செயலர் தலைமையில், மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், திட்டம் மற்றும் மேம்பாட்டு துறை செயலர், மாநில பொறுப்பு அதிகாரியாகவும், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை செயலர் உறுப்பினர் செயலராகவும் இருப்பர். இதுதவிர, முக்கிய துறைகளின் செயலர்கள் உள்ளிட்ட, 18 உயர் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பர்.கலெக்டர் தலைமையில், மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், 21 உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு, அதன் கமிஷனர் தலைமையில், தனியாக குழு அமைக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை