வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தமிழகத்தில் அன்றாடம் நடக்கும் கொலைகள் அதிர்ச்சி அளிக்கின்றன .... பெரம்பலூா் மாவட்டம், தனியாா் பொறியியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்த அப்துல் ஹபீஸ் 22 என்பவரை கடந்த சில ஆண்டுகளாக அல்பியா காதலித்து வந்துள்ளார். ஆன்லைனில் உருவான நட்பு காதலாக மாறியுள்ளது. திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்த ஹபீஸ் லோகநாயகியுடன் உறவில் இருந்துள்ளார். இந்த நிலையில், அப்துல் ஹபீஸை திருமணம் செய்துகொள்வதற்காக இஸ்லாமிய மதத்துக்கு மாறிய லோகநாயகி தனது பெயரை அல்பியாவாக மாற்றிக் கொண்டுள்ளார். இதனிடையே, சென்னை ஆவடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் தாவியா சுல்தானா 22 மற்றும் திருச்சி துறையூரைச் சேர்ந்த செவிலியர் மாணவி மோனிஷா 21 என்பருடன் அப்துல் ஹபீஸ் பழகி வந்துள்ளாா். இவர்கள் இருவருடன் நெருக்கம் ஏற்பட அல்பியாவை தவிர்த்துள்ளார் ஹபீஸ். கடந்த வாரம் தன்னை காயப்படுத்திக் கொண்ட அல்பியா, திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்துவிடுவேன் என்று அப்துல் ஹபீஸை மிரட்டியுள்ளார். இதையடுத்து, அல்பியாவை கொலை செய்ய மற்ற இரண்டு பெண் தோழிகளான தாவியா மற்றும் மோனிஷாவுடன் இணைந்து அப்துல் ஹபீஸ் சதித்திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, கடந்த மாா்ச் 1ஆம் தேதி மூவருடன் அவா் ஏற்காடு வந்துள்ளாா். அல்பியாவின் காயத்துக்கு வலிநிவாரணி செலுத்துவதாக கூறி, விஷ ஊசியை மோனிஷா மூலம் செலுத்தியுள்ளார். அல்பியா மயக்கமடைந்தவுடன் அவரை தூக்கி 60 அடி பள்ளத்தாக்கில் மூவரும் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து ஏற்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்துல் ஹபீஸ், தாவியா சுல்தானா, மோனிஷா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைனில் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறி கொடூர கொலையில் முடிந்துள்ளது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதை மற்றும் பொறுப்பில்லா தலைமுறையை உருவாக்கிய பெருமை முழுக்க திராவிட மாடலுக்கு மட்டுமே சொந்தம்.
up ல போயி பாரு ,தமிழ் நாட்டைவிட ஓயின்ஷொப் அதிகம் ,இந்த பிஜேபி அரசாங்கம் வந்தபின்னர்தான் போதைப்பொருள் அதிகளவில் பயன்பட்டில் இருக்கு, குஜராத்தின் துறைமுகங்கள் வழியாகத்தான் நாட்டுக்குள்ள வருது,
வேலையில்லா திண்டாட்டத்தினால் இளைஞர்கள் எல்லாம் மனநோயாளியாக மாறிவருகின்றனர்.