வாசகர்கள் கருத்துகள் ( 2 )
முஸ்தஃபா யாருக்காக வாண்ட்டடா வந்து சிக்குறாரு ???? புலிகேசியோட கும்பலுக்காக இருக்குமோ ????
பொண்டாட்டிக்கு குடுக்க வசிருந்த பணம்
சென்னை : 'தேர்தலின் போது சிக்கிய, 4 கோடி ரூபாய், ரயில்வே கேன்டீன் உரிமையாளருக்கு சொந்தமானது இல்லை' என, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.லோக்சபா தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிடிபட்ட, 4 கோடி ரூபாய், பா.ஜ., - எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என, கூறப்படுகிறது. இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, 4 கோடி ரூபாய்க்கு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், 1வது நடைமேடையில் கேன்டீன் நடத்தி வரும் முஸ்தபா, 53, என்பவர் உரிமை கோரினார். அவரது வங்கி கணக்கு, பண பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்து, அந்த பணம் முஸ்தபாவுக்கு சொந்தமானது இல்லை என, சி.பி.சி.ஐ.டி., போலீசார் உறுதி செய்துள்ளனர். அவரை கைது செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
முஸ்தஃபா யாருக்காக வாண்ட்டடா வந்து சிக்குறாரு ???? புலிகேசியோட கும்பலுக்காக இருக்குமோ ????
பொண்டாட்டிக்கு குடுக்க வசிருந்த பணம்