உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் மாணவிக்கு கழுத்தறுப்பு; போலீஸ் அறிக்கைக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு!

கரூர் மாணவிக்கு கழுத்தறுப்பு; போலீஸ் அறிக்கைக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு!

கரூர்: கரூரில் 10ம் வகுப்பு மாணவி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கூட்டு பாலியல் வன்கொடுமை இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். ஆனால், போலீசார் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்படுவதாக, மாணவியின் பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, 12ம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மேலும், கழுத்தை அறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zku2882a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவம் குறித்து கரூர் போலீசார் தற்போது விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: மாணவியை, அதே ஊரைச் சேர்ந்த உறவினரான 17 வயது மாணவன், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு வீட்டை விட்டு வெளியே வருமாறு கூறியுள்ளான். அங்கு வந்த மாணவியை கத்தியால் கழுத்துப் பகுதியில் குத்தி விட்டு, அவர் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடிச் சென்று விட்டான். மாணவனைப் பற்றி அந்த மாணவி இழிவாக பேசியதன் காரணமாக, கோபத்தில் இந்த செயலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், மாணவன் கைது செய்யப்பட்டு, விசாரணையில் உள்ளான்.இப்படியிருக்கையில், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கத்தியால் குத்தியாக செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மைக்கு புறம்பான தகவல்களை செய்தியாக வெளியிட கூடாது, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.பெற்றோர் குற்றச்சாட்டுஆனால், போலீசாரின் அறிக்கையை, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மறுத்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் இல்லை என்பதற்கான அறிக்கையில் கையெழுத்து போட்டு தருமாறு போலீசார் தன்னிடம் கேட்டனர் என்றும், அதற்கு தான் மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.போலீசார், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், சிறுமியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

balasubramani
மார் 01, 2025 07:01

These kinds of news s keep repeating in your newspaper for three to four months. It's a shame. Please stop sharing this kind of news it's irritating."


Kasimani Baskaran
பிப் 24, 2025 15:46

பலர் வெவ்வேறு விதமாக திரைக்கதை வசனம் எழுதுகிறார்கள். காவல்துறை எழுதுவது தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. முன்னர் இதே போல குற்றம்சாட்டப்பட்ட ஞாணசேகரன் தனது போனை பிளைட் மோடில் வைத்திருந்ததையே கூட அதி நுட்பமாக நன்றி சுகுவனம் கண்டுபிடித்து சொன்னார்கள்.


Madras Madra
பிப் 24, 2025 13:54

அடுத்த திராவிட மாடல் ஆட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தால் தமிழகம் zombi மாநிலம் ஆகிடும்


Sivak
பிப் 24, 2025 13:49

அவன் கூப்பிட்டான் என்று 10ம் வகுப்பு மாணவி தனியா போயிருக்கா ? இதுங்க திருந்தாத வரைக்கும் ஒன்னும் பண்ண முடியாது ... தன்னை ஒரு போலீஸ்காரன் கேள்வி கேட்டு விட்டான் என்று ஊரே அதகள பட வைத்து அந்த போலீஸ்காரனின் வயிற்றிலும் அடித்த பெண் போன்றவர்கள் இருக்கும் வரை இந்த பெண் ஏன் தவறு செய்தாள் என்று யாரும் கேட்கப்போவதில்லை ... தவறு இருவர் பக்கமும் தான் ..


Anantharaman Srinivasan
பிப் 24, 2025 13:46

பிஞ்சுலேயே காமவெறி பிடித்த மாணவன். சாராயம் குடிக்கும் தகப்பனுக்கு பிறந்திருப்பான். இவனுக்கும் நரம்பை கட் பண்ண வேண்டும்.


Bala
பிப் 24, 2025 13:38

எந்த கொம்பனாலும் குறை சொல்லமுடியாத திராவிட மாடல் ஆட்சியில் இந்தமாதிரி பாலியல் குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்றால்தான் அதிசயம். இன்னொருமுறை திமுக சட்டசபை தேர்தலில் ஜெயித்தால் இந்த புண்ணிய பூமி தாங்காது. இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாக வேண்டி வரும் .


பாரத புதல்வன்
பிப் 24, 2025 13:30

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு பாலியல் குற்றம் நடக்கும் தமிழகம், போதையில் தள்ளாடும் தமிழகமாக மாற்றிய பெருமை முதல்வரையே சாரும் .


Rajan A
பிப் 24, 2025 13:13

தனியாக அழைக்கும்போது மண்டையில் மணி அடித்து இருக்க வேண்டும். பள்ளியில் படிக்கும் போது நல்ல போதனைகள் இல்லை, போதையில் தள்ளாடும் தமிழகம்


S. Venugopal
பிப் 24, 2025 13:02

பழைய காலம் போல அயர் எலிமெண்டரி, செகண்டரி, ஐஸ்கூல் மற்றும் சீனியர் செகண்டரி பள்ளிகளில் கோ-எடுக்காஷனை இன்னும் சிறிது காலத்துக்கு தவிர்க்கலாம்


sridhar
பிப் 24, 2025 12:52

யாரவது பெண்ணிடம் கண்ணியமாக நடந்து கொண்டால் அதை மட்டும் செய்தியா போடுங்க , அதுதான் அதிசயம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை