உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.4 கோடி பறிமுதல்: பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பா?

ரூ.4 கோடி பறிமுதல்: பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பா?

திருநெல்வேலி: சென்னை, எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற, 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த, 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பா.ஜ., உறுப்பினருமான சதீஷ், அவரது சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

சோதனை

திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தமிழ்வேள்
ஏப் 07, 2024 20:25

கஞ்சா விற்பனை செய்த பணத்தில் நாலு கோடியை பயன்படுத்தி பாஜகவின் மீது பழியை சுமத்தி திசை திருப்பும் வகையில் இது திமுகவின் உத்தியாக இருக்க வாய்ப்பு மிகவும் அதிகம் திமுகவின் குசும்பு வேலை


Kannan Iyer
ஏப் 07, 2024 12:31

நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு இது பற்றி விளக்கம் அளிக்க தார்மீக கடமை உள்ளது


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி