உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமலானால் தமிழகம் ஆதரவு தரும் சொல்கிறார் சபாநாயகர் அப்பாவு

இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமலானால் தமிழகம் ஆதரவு தரும் சொல்கிறார் சபாநாயகர் அப்பாவு

திருநெல்வேலி,:''இந்திய அளவில் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமானால், அதற்கு தமிழகம் முழு ஆதரவு தரும்,'' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே ராதாபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு மண்டல மைய துவக்க விழாவில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி: மதுவிலக்கு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினும், வி.சி.க., தலைவர் திருமாவளவனும் நாடகமாடுவதாக மத்திய அமைச்சர் முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். அது குறித்து, அவரிடம் தான் கேட்க வேண்டும். ஒரு கட்சி சார்பில் மாநாடு நடத்துகின்றனர். இதை மற்ற கட்சியினர் தவறு என்று எப்படி கூற முடியும்.மக்கள் என்ன முடிவு எடுக்கின்றனரோ, அதன்படி தான் ஆட்சி அமையும். அதன் பின், ஆட்சியில் உள்ளவர்கள் மக்கள் நலன் சார்ந்து தான் செயல்படுவர். என்ன முடிவெடுத்து, எப்படி செயல்பட வேண்டும் என்பதை அவர்கள் முடிவெடுப்பர். தற்போது மதுவிலக்கு தொடர்பாக கோரிக்கை எழுப்பப்படுகிறது. இந்தியா முழுதும் மதுவிலக்கு அமல்படுத்தும்போது, அதற்கு முழு ஆதரவாக தமிழகம் திகழும். அதுவரை பொறுத்திருப்போம்.நடிகர் விஜய் கட்சி துவக்கி இருக்கிறார். அவர் கொள்கையை சொல்லட்டும். முதல் மாநாடு நடக்கட்டும். அவர் வருவதற்கு முன்பாகவே ஏன் கல் எடுத்து எறிய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி