உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 67 தமிழக படகுகள் ஏலம் இலங்கை அரசு உத்தரவு

67 தமிழக படகுகள் ஏலம் இலங்கை அரசு உத்தரவு

ராமேஸ்வரம்,:ராமேஸ்வரம் முதல் நாகை வரை உள்ள விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் பாக் ஜலசந்தி, வங்கக் கடலில் மீன்பிடிப்பது வழக்கம். இவர்கள் மீன்களை தேடி எல்லை தாண்டி இலங்கை பகுதிக்குள் மீன்பிடிக்க செல்கின்றனர். இதனால் இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கி, படகுகளை சிறைபிடித்து பல மாதங்களாக மீனவர்களை சிறையில் அடைக்கின்றனர்.கடந்த, 2024ல் இலங்கை கடற்படையினர், 62 விசைப்படகுகள், ஐந்து நாட்டுப்படகுகளை சிறைபிடித்தனர். இதில், 57 படகுகளுக்கான வழக்குகள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்திலும், 10 படகுகளுக்கு மன்னார், கிளிநொச்சி நீதிமன்றங்களிலும் நடந்தன. அனைத்து படகுகளையும் நீதிமன்றங்கள் அரசுடைமையாக்கின.இதையடுத்து, 67 படகுகளையும் ஏலத்தில் விட இலங்கை மீன்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதில், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள், 32, மண்டபம் 3, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் 14, நாகை 16, புதுச்சேரி 2 படகுகள் உள்ளன.பல கோடி ரூபாய் மதிப்புள்ள இப்படகுகளை ஏலத்தில் விடுவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து, படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ