உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனிமவள கொள்ளையை தடுக்கணும்: ராமதாஸ்

கனிமவள கொள்ளையை தடுக்கணும்: ராமதாஸ்

சென்னை :பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:கன்னியாகுமரி மாவட்டத்தில், நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. அங்குள்ள பணிகளுக்கு கனிம வளங்கள் தேவை எனக் கூறி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மலைகளையும், குன்றுகளையும் தகர்க்கும் பணிகள் துவங்கி உள்ளன. அவ்வாறு தகர்த்தெடுக்கப்படும் கனிம வளங்களும், கேரளத்திற்குத்தான் கடத்தப்படுகின்றன என்பது வேதனையான உண்மை.திருவட்டாறு கல்லுப்பாலம் பகுதியில்தான், மேற்குத் தொடர்ச்சி மலையில் கனிமவள கொள்ளை மிக அதிகமாக நடக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. கல்லுப்பாலம் பகுதியிலும், அதே அளவில் கனிமவள கொள்ளையை நடத்த, கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்.கனிமவளம் சுரண்டப்படுவதால், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நடந்தது போன்ற நிலச்சரிவு, கன்னியாகுமரி மாவட்டத்திலும் நடக்கலாம். அவ்வாறு நடந்தால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படலாம் என்று, சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டத்தை பாதுகாக்கும் வகையில், அங்கு நடக்கும் கனிமவள கொள்ளையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
செப் 09, 2024 11:58

கனிம வளமா? அப்படி ஒன்றே இல்லாமல் செய்து கொண்டு உள்ளனர் இந்த திருட்டு திராவிடியா கூட்டத்தினர். இவனுக கொள்ளையடிச்சு வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகி விடுவார்கள். இங்கே உள்ள நமது பிள்ளைகள்தான் கஷ்டப்பட போகுது. இவனுகள கேள்வி கேட்க யாருமே இல்லை. ஏனென்றால் மக்களையும் கரப்ட் செய்துகொண்டு உள்ளனர். இந்த திருடர்கள் இருக்கிற வரையில் தமிழ்நாடு உருப்பட போவதில்லை.


Barakat Ali
செப் 09, 2024 08:53

திராவிடக் கட்சிகளுடன் சுமார் இருபதாண்டுக்காலம் கூட்டணியில் இருந்த பொழுது கனிமவளக் கொள்ளையே நடக்கலையா ???? அல்லது தட்டிக்கேட்க உடாம கூட்டணி தர்மம் தடுத்துருச்சா ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை