உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிடிபட்ட பணம் யாருடையது: நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்

பிடிபட்ட பணம் யாருடையது: நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்

சென்னை: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்த வழக்கில், பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உட்பட நான்கு பேருக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். அவர், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்து, ஏப்., 6ல், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்து, நான்கு பேரை கைது செய்தனர்.இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன் உறவுக்காரர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டதோடு, பா.ஜ., தொழில் பிரிவு செயலர் கோவர்த்தனன், அவருடைய டிரைவர் கணேஷ் உள்ளிட்டோரை போலீசார் விசாரித்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் அடுத்தடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது தொடர்பாக ஏற்கனவே தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடமும் விசாரணை நடத்தப்பட்டதோடு, வீடும் சோதனையிடப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., தலைமை அலுவலகத்தில் நாளை ஆஜராக வேண்டும் என, நயினார் நாகேந்திரன், அவருடைய உதவியாளர் மணிகண்டன், பா.ஜ., அமைப்பு செயலாளர் கேசவவிநாயகன், கோவர்த்தனன் ஆகியோருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.இந்தப் பிரச்னைக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அதனால் வழக்கில் எனக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கக் கூடாது என கேசவ விநாயகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறியதாவது: நெல்லை ரயிலில் பிடிபட்ட 4 கோடி ரூபாய்க்கும், எனக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என, போலீஸ் விசாரணைக்கு முன்பாகவே நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களிடம் கூறிவிட்டார்.அதேபோல, அந்தப் பணத்துக்கும் பா.ஜ.,வுக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது என சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தன் தரப்பு விளக்கமாக சொல்லி விட்டார் கேசவ விநாயகன். பணம் யாருடையது. அதை அறியும் தீவிரத்தில் தான் விசாரணை குழுவினர் உள்ளனர்.நயினார் மற்றும் கேசவ விநாயகன் இருவரிடமும் தீவிரமாக விசாரிக்கையில், பணம் யாருடையது என்பதை போலீஸ் கண்டறியும். அதன் பின், அந்த கோணத்தில் விசாரணை செல்லும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
மே 30, 2024 12:05

இவர் தப்பித்தவறி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது போல் உள்ளதே!


Anbuselvan
மே 30, 2024 10:43

இதெல்லாம் ஜூன் நான்காம் தேதிக்கு பிறவு பாத்துக்கலாம்


S.Bala
மே 30, 2024 09:58

தேர்தல் நேரத்தில் ரயில் நிலையத்தில் கைப்பற்றபட்ட பணத்தை RPF தான் விசாரிக்க வேண்டுமே தவிர மாநில காவல்துறை எப்படி விசாரிக்க முடியும் ?


M Ramachandran
மே 30, 2024 09:49

சதிகாரா திருட்டு கும்பல் தீய விஷ ஜந்துக்கள் கூட்டம் நிறைந்து தமிழ்நாட்டை விஷ காற்றால் விஷத்தை கக்கி விஷ காற்றால் நாசமாக்கி கொண்டிருக்கிறது என்று தணியும் இந்த சுதந்திர தாகம்


M Ramachandran
மே 30, 2024 09:44

அவர்களும் தலை கீழ் நின்று குட்டிக்கரணம் போட்டு வித்தை காட்டுகிறார்கள். இதெல்லாம் 4 ஆம் தேதிக்கு பிறகு காட்சிகள் மாறும் மிரட்டல் எல்லாம் கவைய்க்கு உதவாது பின் ஜுஜுபி தான். அப்புறம் காட்சிகள் மாறும். ஐயோ அம்மா பழைய ரெக்கார்டு மாப்பிளை மச்சான் சத்தம் தினகரன் சகிதம் கேட்க்கும்.


veeramani
மே 30, 2024 09:36

தென் தமிழ்நாட்டின் மக்க்களின் மதிப்பிற்குரியவர் நயினார் நாகேந்திரன். கட்சிக்கு அப்பாற்பட்டவர். தென் தமிழகத்தின் விடிவெள்ளி. சென்னையில் ரயிலில் எவரோ பணம் எடுத்துவரும்போது பிடிபடுகின்றனர். அவர்களை எவர் வேண்டுமானாலும் விசாரிக்கலாம். ஆனால் கட்சி வேட்பாளர் பணம் என நினைப்பது வேடிக்கை. திண்டுக்கல் ஈ டி அதிகாரி போல சில வினைகள் நடக்கின்றன. காவல்துறை அதிகாரிகள் மிக திறமையானவர்கள்


ஆரூர் ரங்
மே 30, 2024 09:34

கதிர் சம்பந்தப்பட்ட இடங்களில் பூத் எண்களின் விவரங்களுடன் விநியோகத்துக்கு வைத்திருந்த ஐந்து கோடி பிடிபட்டு ஐந்தாண்டுகளாகி விட்டன. ஆனாலும் கட்சி அவருக்கே மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது. இதில் என்ன வேடிக்கைன்னா இதுவரை இனிஷியல் இல்லாத துரைமுருகன், D இனிஷியல் உள்ள துரைமுருகன் இருவரும் ஒரே நபரா என்ற சந்தேகம் இன்று வரை விலகவில்லை.


Kasimani Baskaran
மே 30, 2024 08:09

பணத்தை வைத்து பிடிக்கும் தீம்காவுக்கு அதனாலேயே அழிவு வரப்போகிறது. அமலாக்கத்துறை காத்திருக்கிறது - நேரம் பார்த்து அடிக்கும். அப்பொழுது தீம்காவல் ஒன்றும் செய்ய முடியாது. கதற மட்டுமே முடியும்.


குமரி
மே 30, 2024 07:48

தியானம் பண்ணுறவரை. குறி கேக்கலாமே?


GMM
மே 30, 2024 07:32

ஒருமுறை மூன்று லாரி பணம் பிடிபட்டது. தற்போது செல்லாது. துரை முருகன் பத்து கோடிக்கு மேல் பிடிபட்டு, பெற்றோர் பெயர் குழப்பத்தில் இருந்தது. இது போன்று ஏராளம் முடிவு தெரியவில்லை. தற்போது பிடிபட்ட பணம் திமுக கட்சிக்கு தொடர்பு இல்லாதது. ஆகவே, திமுக சாராத அனைத்து பிஜேபி உறுப்பினர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை