உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சத்திய ஞானசபையை ஆக்கிரமிக்கும் முயற்சியை தி.மு.க., நிறுத்த வேண்டும்!

சத்திய ஞானசபையை ஆக்கிரமிக்கும் முயற்சியை தி.மு.க., நிறுத்த வேண்டும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை :

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:

கடலுார், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபைக்கு சொந்தமான இடத்தை, சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை, தி.மு.க., துவங்கியிருக்கிறது. வள்ளலாரின் ஆன்மிக பணிகளுக்காக, மக்கள் தானமாக வழங்கிய நிலத்தில், 150 ஆண்டுகளுக்கு மேலாக அனைவரின் பசி தீர்க்கும் மேன்மையான பணி நடப்பதோடு, லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச தினத்தன்று ஜோதி தரிசனமும் பெற்று வருகின்றனர். உண்மையில் தி.மு.க., அரசின் நோக்கம், சர்வதேச மையம் அமைப்பது தான் என்றால், சத்திய ஞான சபைக்கு சொந்தமான ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, 30 ஏக்கர் நிலத்தை மீட்டோ அல்லது வேறு இடத்திலோ அமைக்க வேண்டும். மீண்டும் சத்திய ஞானசபைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க கூடாது என்று கண்டனம் தெரிவித்திருந்தோம்.பின், வள்ளலாரின் பக்தர்கள் மற்றும் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், லோக்சபா தேர்தல் காரணமாகவும், கட்டுமான பணிகளை நிறுத்தி வைத்து நாடகமாடிய தி.மு.க., தற்போது, காவல் துறை பாதுகாப்புடன் மீண்டும் பணி துவங்கியிருப்பதாக தெரிய வருகிறது.அரசுக்கு பல ஆயிரம் ஏக்கர் இருக்கும் போது, விவசாய நிலங்களை அழித்து, 'சிப்காட்' பூங்கா அமைப்பது, சத்திய ஞான சபைக்கு சொந்தமான இடத்தில் மையம் அமைப்பது என, தி.மு.க., அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கின்றன.மக்கள் மற்றும் பக்தர்களின் விருப்பத்திற்கு எதிராக சத்திய ஞான சபையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை, தி.மு.க., அரசு உடனே நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ஆரூர் ரங்
ஏப் 24, 2024 15:13

வள்ளலாருக்கு என்ன தொடர்பு?


Lion Drsekar
ஏப் 24, 2024 14:18

தமிழறிஞரும், பதிப்பாளரும் ஆவார் இவர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் தமிழ்த் தாத்தா எனச் சிறப்பிக்கப்பட்டார் திரு உ வே சாமிநாத அய்யர் அவர்கள் அவர் தமிழ் மொழியில் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று அச்சிட்டுப் பதிப்பித்தவர் இவரது பெயர் யாருக்காவது தெரியுமா? இவரது பெயரில் மருத்துவமனை, ஊருக்கு பெயர், பேருந்துக்கு பெயர், இரயில் நிலைத்துக்கு பெயர், எங்கெல்லாம் மக்கள் கூறுகிறார்களோ அங்கெல்லாம் ஒரு குடும்பத்தின் பெயரை மட்டுமே, அவர்களை மட்டுமே பேசவேண்டும், உச்சரிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் கோழி முட்டை கொடுத்தாலும் குடும்பத்தாரின் பெயர், இருக்கப்போவது இன்னமும் சிலகாலங்கள் , இந்த பூனைக்கு யாரும் மணி கட்ட தயாரில்லை, திருத்தவும் முன்வருவதில்லை, ஏதோ தினமலர் என்ற ஒரு பத்திரிக்கை மனதில் தோன்றும் ஆழ்ந்த வேதனைகளுக்கு மதிப்பு கொடுத்து சமூகத்துக்கு எடுத்துச்செல்லும் பணியில் இருப்பதால் உரிமையோடு பகிர்ந்தது கொள்வதில் பெருமை இந்த ஏழைகளின் குரலும் அம்பலத்தில் எடுபடுவதற்கு இரு கரம் கூப்பி நன்றி வந்தே மாதரம்


balasubramanian
ஏப் 24, 2024 12:21

hello gentle man dont try to support DMK and hooligans better than you i know about the place and have been brought up from that area itself please ask your bosses to keep away from that land


அசோகன்
ஏப் 24, 2024 12:17

ஒருதடவை எங்க உலக தலைவன் செலஃபீ எடுத்தா போதும் அந்த நிலத்தை கடவுளே ஆனாலும் காப்பாத்தமுடியாது ???? இனி அது கட்டுமரத்தின் சொத்து


Duruvesan
ஏப் 24, 2024 10:57

அதை ஹிந்துக்கள் பார்த்துப்பாங்க ,போதை பொருள் சாதிக் காப்பாத்த வழிய பாரு


rajendiran
ஏப் 24, 2024 10:18

தமிழக இந்துக்களுக்கு எப்போதுதான் விழிப்பு வருமோ தெரியவில்லை


Sampath Kumar
ஏப் 24, 2024 09:30

அய்யா அரை வேக்காடு நாவை அடிக்கி பேசு யாரு வள்ளலார் திரு சபையை அபகரிக்க பார்ப்பது ?


hari
ஏப் 24, 2024 10:39

200 ரூபாய் கொத்தடிமை சம்பத்து.... உண்மை சொன்னா எரியுதா....


sridhar
ஏப் 24, 2024 13:15

திமுக தான் தில்லு முல்லு கழகம் தான்


Kasimani Baskaran
ஏப் 24, 2024 08:30

எங்கெல்லாம் சொத்துகள் அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் தீம்காவினர் வரிசை கட்டி நிற்பர் வேறு வழிகள் அதிகமில்லை என்றால் அடுத்த இலக்கு கோவில்கள்தான் கோவில் நிர்வாகிகள் கவனமில்லாமல் இருந்தால் தீம்கா கபட வேடதாரிகள் பக்தர்கள் வேசத்தில் அறங்காவலர்களாக கோவிலுக்குள் புகுந்து விடுவார்கள்


J.V. Iyer
ஏப் 24, 2024 07:18

கொள்ளை கொள்ளை கொள்ளையோ கொள்ளை இதற்கெல்லாம் எப்போதுதான் முடிவுரை எழுதப்படுமோ தெரியவில்லையே இறைவா


gajendran G
ஏப் 24, 2024 07:10

வணக்கம், வள்ளலார் சிறந்த தத்துவஞானி என்பதுடன் அவர் அன்றைய வழிபாட்டு முறைமைகளுக்கு எதிராக சிந்தித்ததால் எளிய சிறந்த ஞானத்தை மக்களிடம் பரவச்செய்து அதற்கெனத் தனிவழிபாட்டு நிலையத்தையும் அமைத்தார் இன்று உலகெங்கிலும் அவரைப் பின்பற்றுவர்கள் இலட்சங்களில் உள்ளனர் இந்நிலையில் அவர் அமைத்த நிலையத்தில் தற்போது அரசு வள்ளலார் பண்பாட்டு மையம் அமைப்பது பாராட்டுக்குரியது இது வள்ளலாருக்கு இன்னும் பெருமை சேர்க்கும் இந்தத்திடல் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச விழாவின்போது கடைகள் வைக்கவும் வாகனங்கள் நிறுத்தவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவே அங்கே வள்ளலார் பண்பாட்டு மையம் அமைப்பது சாலச்சிறந்தது


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ