மீனவர் வெட்டிக்கொலை கடலுக்குள் கும்பல் தப்பியது
திருநெல்வேலி: கூடங்குளம் அருகே மீனவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை கும்பல் கடல் வழியே படகுகளில் தப்பிச் சென்றது.திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கடற்கரை கிராமம் கூத்தங்குழியில் சர்ச் திருவிழா தொடர்பாக மீனவர்கள் இரு தரப்பினராக உள்ளனர். நேற்று இரவு அஜித் 37, என்ற மீனவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த அதே ஊரைச் சேர்ந்த கும்பல் படகுகளில் கடலுக்குள் தப்பி சென்றனர். கூடங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.