உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவைக் குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் 1ல் வினாடிக்கு 300 கன அடி திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 119.15 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அதன்பின் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்து நீர்மட்டம் 123.7 அடி எட்டியுள்ளது.நீர்மட்டம் உயர்ந்து வந்ததால் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவையும் நீர்வளத் துறையினர் வினாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்தனர். கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளது.நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் குறையும் வாய்ப்புள்ளது. தற்போது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. அதனால் அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை 600 கன அடியாக குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

shyamnats
ஜூலை 02, 2024 08:18

ஏன் விவசாயிகளுக்கு தெரியும் நீர் மேலாண்மை கருத்துக்கள், தமிழக அரசு பொறியாளர்களுக்கு தெரியாதா? நீர் அதிகமாக வரும் பொது கடலில் விட்டுவிட்டு, அடுத்த மாதமே, அண்டை மாநிலங்களில் கையேந்தும் நிலையை மாற்ற ஆட்சியாளர்கள் யாருமே முன் வர மாட்டார்களா? வெட்டியாக ஏற்கனவே நட்டத்தில் ஓடும் பேருந்து துறைகளில் பெண்களுக்கு இலவசம், பெண்களுக்கு உரிமை தொகை என்று ஆண்டுக்கு பல்லாயிரம் கோடிகள் செலவிடப்படுவதை இம்மாதிரி ஆறுகளில் தடுப்பணைகள் , குளங்கள் வெட்டினாலே மக்கள் , விவசாயிகள் வாழ்த்துவார்கள், அந்தந்த குடும்பங்களின் மகளிரும் முன்னேற்றமடைவார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை