உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்துக்கட்சி தலைவர்களை சந்திப்போம்: அண்ணாமலை

அனைத்துக்கட்சி தலைவர்களை சந்திப்போம்: அண்ணாமலை

சென்னை: ''அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற, 45 கட்சிகளுக்கும், பா.ஜ., சார்பில் கடிதம் எழுதப்படும். அக்கட்சிகளின் தலைவர்களை, பா.ஜ., மூத்த தலைவர்கள் சந்தித்து, தொகுதி மறுவரையறை தொடர்பாக, சந்தேகம், அச்சம் இருந்தால், அதை நீக்க உரிய விளக்கம் அளிப்பர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழக பா.ஜ., சார்பில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்ற கையெழுத்து இயக்கம் துவக்க நிகழ்ச்சி, சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்தது. இதை, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், இணையதளம் வாயிலாக ஆதரவு தெரிவிக்க, 'புதிய கல்வி' என்ற இணையதளத்தை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அண்ணாமலை, மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

டிஜிட்டல் முறை

அப்போது அண்ணாமலை அளித்த பேட்டி:பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள, தேசிய கல்விக் கொள்கையில், மூன்றாவது மொழியாக, இந்திய மொழி ஒன்றை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், அதை ஏற்க மறுத்து என்னென்னவோ சொல்கின்றன தமிழக கட்சிகள். மும்மொழிக் கல்விக்கு ஆதரவாக, ஒவ்வொரு கிராமத்திலும் பா.ஜ.,வினர் வீதி வீதியாக சென்று, மக்களிடம் கையெழுத்து வாங்குவர். இதற்கான இணையதளத்தில், டிஜிட்டல் முறையில் கையெழுத்திடும் வசதி உள்ளது. மே கடைசிக்குள், ஒரு கோடி கையெழுத்துகள் பெற்று, ஜனாதிபதியிடம் வழங்கி, தமிழக மக்களின் குரலை எடுத்துரைப்போம். மக்கள் தொகை அடிப்படையில், தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்பது, காங்கிரசின் அடிப்படை கொள்கை. இதை பிரதமர் மோடி எதிர்க்கிறார். லோக்சபாவில், 543 எம்.பி.,க்கள் உள்ளனர். அதில், தமிழகத்தின் பங்கு, 7.17 சதவீதம். எம்.பி.,க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், தமிழகத்திற்கு, 7.17 சதவீதம் அப்படியே இருக்கும் என, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாகக் கூறி விட்டார். அப்படி இருக்கும்போது, அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் என்ன? தமிழகத்தில் எம்.பி.,க்கள் எண்ணிக்கையை குறைக்கப் போவதாக, முதல்வருக்கு யார் தகவல் தெரிவித்தனர் என தெரிவிக்கவில்லை. தொகுதி மறுவரையை, 2000ல் ஒத்தி வைத்தது, பா.ஜ.,வைச் சேர்ந்த பிரதமர் வாஜ்பாய். யாரும் கூறாத நிலையில், தொகுதி மறுவரையறையை, 30 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும் என, ஸ்டாலின் கூறுகிறார். தென்மாநிலங்களில் உள்ள அனைத்து கட்சிகளையும் இணைத்து, போராட்டக் குழுவை உருவாக்குவோம் என்கிறார். தமிழகத்திற்கு எட்டு எம்.பி.,க்கள் குறையும் என்று சொல்கின்றனர். தேர்தல் கமிஷன், மத்திய அரசு, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், பார்லிமென்டில் நடந்த கடைசி கூட்டம் என, எங்குமே இது சம்பந்தமாக எதுவுமே கூறவில்லை.

எங்கள் கடமை

கூட்டணி குறித்து, மறைமுகமாக யாரிடமும் பேசவில்லை. சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஓராண்டு உள்ளது. நேரம் வரும்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கும் என்பது குறித்த அறிவிப்பு வரும். அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற, 45 கட்சிகளுக்கும், பா.ஜ., சார்பில் கடிதம் எழுதப்படும். அவர்களை, பா.ஜ., மூத்த தலைவர்கள் சந்தித்து, மறுவரையறை தொடர்பாக, அவர்களுக்கு சந்தேகம் இருந்தால், அதை தெளிவுபடுத்துவர். இதை எங்களின் கடமையாக பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

VSMani
மார் 07, 2025 17:12

டாக்டர் அக்கா டீச்சர் அக்கா-வாக மாறி மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்


வரதராஜன்
மார் 06, 2025 08:41

மக்களை சந்தித்து ஜெயிக்க முடியாதவர்கள் என்னதான் கையெழுத்து போட்டாலும் உங்க தலையெழுத்தை மாற்றவே முடியாது வெற்றி என்பது உங்களுக்கு எட்டா கனி நீங்க எல்லாம் படிச்சவங்க மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கையின் சொல்லுது மாநில அரசு இரு மொழி சொல்கிறது கட்சி பாகுபாடு இல்லாமல் ரெண்டு யோசனை பண்ணுங்க அதையே செய்ய மாட்டேங்கிறீங்க நீங்க


முருகன்
மார் 06, 2025 07:56

ஹிந்தி பேசும் மாநிலங்களில் எத்தனை பேர் தென் மாநிலங்களின் மொழியை முன்றாவது மொழியாக படிக்கின்றனர் என செல்ல முடியுமா


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 06, 2025 11:01

அனைத்து மாநிலங்களுக்கும் தூதுக்குழுவை அனுப்பி அனைத்து மாநில முதல்வர்கள் கல்வி அமைச்சர்கள் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர் இயக்கங்கள் மாணவ குழுக்களுடன் பேசி கலந்துரையாடி தமிழை மூன்றாவது மொழியாக தெரிவு செய்ய வைக்கலாம். அதற்கான பாட புத்தகங்கள் தமிழக அரசு தயார் செய்து கொடுக்கலாம். தமிழ் ஆசிரியர்கள் தமிழ் கற்பிக்க அனுப்பலாம். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லலாம். தமிழை வளர்க்கலாம் உண்மையிலேயே தமிழ் மீது அக்கறை இருந்தால். அக்கறை இல்லாவிட்டாலும் பரவாயில்லை தூதுக்குழுவில் மந்திரிமார்களின் சொந்தங்களை அனுப்பலாம். கழக கண்மணிகளை ஊர் சுற்ற அனுப்பலாம். தமிழ் ஆசிரியர் நியமனத்தில் நல்ல காசு பார்க்கலாம். புத்தகங்கள் அச்சடிப்பில் பல கோடிகளை அள்ளலாம். ஆடியோ வீடியோ பத்திரிகை விளம்பரம் மூலம் பல ஆயிரம் கோடிகள் சம்பாதிக்கலாம். இது திமுகவிற்கு கை வந்த கலை. யாரும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இதற்காகவாவது தமிழ் வளர்க்கலாமே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல்.


ஆரூர் ரங்
மார் 06, 2025 11:06

பல மாநிலங்களில் உருது மூன்றாம் மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. அதனை எதிர்ப்பீர்களா? புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்ட எல்லா மாநிலங்களிலும் மும்மொழி கல்வி கட்டாயம்தான். ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு விட்டது.


vijai hindu
மார் 06, 2025 14:55

முருகா ஹிந்தி மொழி என்பது நம் தேசிய மொழி தென் மாநில மொழி அந்த அந்த மாநிலத்தில் மட்டும்தான் பேசப்படுகிறது ஹிந்தி பேசும் மக்கள் தென் மாநிலம் வந்தால் அந்த மாநில மொழி கற்றுக் கொண்டு பேசுகிறார்கள்


பேசும் தமிழன்
மார் 06, 2025 07:52

அத்தனை கேடுகளை செய்வது கான் கிராஸ் கட்சி தான்.... ஆனால் அவர்களது இண்டி கூட்டணி ஆட்களே... அதற்க்கு எதிராக இருக்கிறோம் என்பது போல் நாடகம் நடத்துவது.... யாரை ஏமாற்ற ???


T.sthivinayagam
மார் 06, 2025 07:51

இறை வழிபாடை சம மொழியில் வழிபடலாம் என்று சொல்ல தமிழக பாஜாவினர்க்கு தைரியம் உண்டா என ஹிந்துக்கள் கேட்கிறார்கள்


vivek
மார் 06, 2025 08:03

உண்மை இந்துக்கள் கேட்கவில்லை...உன்னை போல் 200 ரூபாய் கொத்தடிமை தான் கேட்கிறது என்று நான் கூறுகிறேன் அறிவிலி


ஆரூர் ரங்
மார் 06, 2025 11:10

90 சதவீத ஆலயங்களில் BC, SC பூசாரிகள்தான் உள்ளனர். தமிழில் வழிபாடு நடத்துகின்றனர். அதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் இலவசப் பயிற்சி அளிக்கிறது. மீதியுள்ள சிவாலயங்களில் ஓதுவார்கள் தமிழ்த் திருமுறைகளை ஓதி வருகின்றனர். பகுத்தறிவு பேசும் கூட்டம் இதில் தலையிடக்கூடாது.


அப்பாவி
மார் 06, 2025 06:31

முதலில் இந்த வானதி, தமிழிசை, பொன்னார், நயினார் எல்லோரும் முதியோர் பள்ளியில் சேர்ந்து ஹிந்தி படிச்சு பாஸ் பண்ணி புதிய இந்திக் கொள்கை எவ்ளோ எளிமையானதுன்னு மக்களுக்கு புரிய வைக்கணும். அதே மாதிரி, மோடி, தர்மேந்திரபிரதான், அமித்ஷா ரவி நால்வரும் தமிழ்ச் சங்கம் மூலம் தமிழ் பயின்று, தேர்வில் வென்று வடக்கவர்க்கு தமிழ் கற்பது எவ்வளவு சுலபம்னு வடமாநிலத்தவர்க்கு புரிய வைக்க வேண்டும்.


Kasimani Baskaran
மார் 06, 2025 05:59

7.17% பிரதிநிதித்துவம் என்பது தவறானது. 8 கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்துக்கு 40 இடங்கள் என்றால் 24 கோடி மக்கள் தொகை உள்ள உத்தரப்பிரதேசத்துக்கு 120 என்பதுதான் ஞாயம். 80 என்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயம். ஒவ்வொரு குடிமகனின் குரலும் பாராளுமன்றத்தில் ஒலிக்க ஞாயமான பிரதிநிதித்துவம் மிக அவசியம்.


முருகன்
மார் 06, 2025 07:57

பிறகு எதற்கு மக்கள் தொகை கட்டுப்பாடு அமல் படுத்த பட்டது


VARUN
மார் 06, 2025 14:54

காசிமணி நீ தமிழ்நாட்டில் இருக்கவேண்டியவன் இல்ல, உபில்ல போய் ஹிந்தி படித்து நாட்களை நகர்த்து


Amsi Ramesh
மார் 07, 2025 17:32

VARUN அவர் கேட்பது சரியாக படவில்லையா உங்களுக்கு


மாலா
மார் 06, 2025 04:26

நலம் விசாரிக்கலாம் மத்தபடி வேலைக்காக து உருப்படரவழிய பாரு


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மார் 06, 2025 05:08

இத அந்த 45 கட்சிகளுக்கு சொல்லுங்க.....உருப்படாம போயிட்டிருக்குறது அவங்க தான்....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை