உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை என்ன? நாளை கேட்கிறது அமைச்சர்கள் குழு

அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை என்ன? நாளை கேட்கிறது அமைச்சர்கள் குழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை குறித்து, நாளை (பிப்.,24) அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்த உள்ளது.தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி வருகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறை வேற்றவில்லை என்றால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=znntopuq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கையை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு, அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இந்த குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், மனித வள மேலாண் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இடம் பெற்றுள்ளனர்.அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை 24ம் தேதி தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பேச்சு நடத்த உள்ளனர். கூட்டத்தின் முடிவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Laddoo
பிப் 23, 2025 20:57

ஏம்ப்பா பெத்த ராசு, அரசு ஊழியர்களுக்கு அப்படி வக்காலத்து வாங்குற? அரசு வருமானத்துல 90% புடுங்கி தின்னுட்டா வேற செலவுகளுக்கு கையேந்தி நிற்கணுமா? 75% அரசு ஊழியர்கள் தேவையேயில்லை. வருது இருங்க அண்ணாமலை ஆட்சி, அப்ப பார்ப்பீங்க நிர்வாகம் எப்படி இருக்கனும்னு.


பெரிய ராசு
பிப் 23, 2025 21:55

ரைட்டரா லவடு அப்புறம் எதுக்கு இந்திய ஆட்சி பணி IAS IPS IFS எல்லாம் எல்லாம் ஊட்டுக்கு அனுப்பிடலாமா , நீ போயி அல்லாம் பண்ணிடுவாயா , மோதலே அத்தைக்கு மீசை மொளைக்கட்டும் அப்பால் சித்தப்பன் ஆக்கலாம் லவுடிகபால்


M Ramachandran
பிப் 23, 2025 20:19

மலை பாம்பு போல் நீங்கள் முழுங்கிய துட்டையெல்லாவம் வாந்தி எடுத்து விட்டு அப்புறமா பேச்சு வார்த்தை நடத்தலாம்


Rajarajan
பிப் 23, 2025 17:45

உடனே தமிழக அரசு, ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடவேண்டும். மாநில அரசின் வருவாயில், அரசு ஊழியரின் செலவு என்ன, நஷ்டத்தில் இயங்கும் துறைகள் எவை என அறிக்கை வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான், முதலில் இந்த நிர்வாக செலவை சட்டசபையில் தைரியமாக போட்டு உடைத்தவர். தற்போது தமிழத்தில் எந்த ஆளும் அரசாக இருந்தாலும், அரசு ஊழியருக்கும், இலவசத்திற்கும் கஜானாவை காலிசெய்துவிட்டு, பொதுமக்களை மேலும் மேலும் விலைவாசி மற்றும் வரிவிதிப்பில் வாட்டி வதைக்கின்றனர். ஆமாம், பா.ஜ.க. கூட இது சம்பந்தமாக வாய் திறக்க மறுப்பதேன் ? பின்னர், ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆனால் என்ன ?? இதற்கு முடிவு கட்ட தெரியாத எந்த கட்சிக்கும், பொதுமக்கள் வாக்களிக்கவே கூடாது. அவர்கள் அடுத்த தேர்தலில், இதுகுறித்து வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். சரி, இதற்கு ஒரு பொதுநல வழக்கு எங்கே ??


K B JANARTHANAN
பிப் 23, 2025 15:12

அரிசின் மொத்த வருமானத்தில் 90 சத விகிதம் அரசு அலுவலர்களுக்கே செலவாகிறது என சு அவ்வப்பொழுது சொல்கிறது. நீதி துறை மற்றும் காவல் துறை தவிர மற்ற அணைத்து துறைகளையும் தனியாரிடம் அரசு ஒப்படைக்குமா ?.


பெரிய ராசு
பிப் 23, 2025 18:49

ஏன் நீதி துறையும் காவல் துறையும் தனியாரிடம் ஒப்படைத்தால் என்ன மூக்கு பொடிப்ப இருந்த இப்படித்தான் யோசனை வரும்


Subburamu Krishnasamy
பிப் 23, 2025 14:28

Only one demand. Please recognize us bonded labourers to political netas.


Subburamu Krishnasamy
பிப் 23, 2025 14:10

Association office bearers are strong supporters of dravidian parties leaders. They will act like a savior of employees . They are also the party for the corruption in government offices in the state.


Jay
பிப் 23, 2025 13:31

தினுசு தினுசா போராட்டங்களை நடத்தி ஊதிய உயர்வு பெற்று தற்போது தமிழக அரசின் வருமானத்தில் 90% அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு சரியாகிவிடுகிறது. அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதில் தனியார் நிறுவனங்களுக்கு பெரிய நெருக்கடி ஏற்படுகிறது. அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருப்பதால் கொடுக்கப்படும் சம்பள உயர்வு பணம் வீக்கத்தை அதிகப்படுத்துகிறது. அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் பொதுமக்கள் கட்டும் வரியிலிருந்து வருகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. பொது மக்களுக்கு ரோடு கட்டிடம் என்று கட்டுமானங்கள் வேண்டுமா அல்லது மக்கள் கட்டும் பணத்தை அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக கொடுக்கலாமா என்பதை மக்கள் சற்று யோசிக்க வேண்டும். 90% மக்கள் உழைத்து கட்டும் வரியை நேரடியாக எடுத்துக்கொள்வது அம்பானியோ அதானையோ அல்ல, அரசு ஊழியர்கள்தான்.


பெரிய ராசு
பிப் 23, 2025 18:50

நீ எவ்வளவு ரூபாய் வரி கட்டுரே ?


புதிய வீடியோ